திருப்பூர், மே 22- திருப்பூர் பேருந்து நிலையத்தில் மாலை நேரத்தில் மின் விளக்குகள் எரியாமல் இரு ளாக இருப்பதால் பெண்களுக்கு பாது காப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே, உட னடியாக பேருந்து நிலையத்தில் மின் விளக் குகளை சரி செய்ய வேண்டும் என அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க 12 ஆவது திருப்பூர் தெற்கு ஒன்றிய மாநாடு சிட்கோ பகுதியில் ஞாயிறன்று நடைபெற் றது. மாநாட்டின் துவக்க நிகழ்வாக காலை 10 மணிக்கு சிட்கோ பேருந்து நிறுத்தத்தி லிருந்து பெண்கள் பங்கேற்ற பேரணியை திருப்பூர் மாநகராட்சி 53 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ர.மணிமேகலை தொடக்கி வைத்தார். பேரணி முகப்பில் தப் பாட்டம், சிலம்பாட்டம் உடன், பெண்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர். இப்பேரணி சிட்கோ மெயின் கேட், வெள் ளக்கரடு, எஸ்.வி.புதூர் வழியாக சென்று மாநாடு நடைபெறும் சிவசக்தி நகரில் நிறை வடைந்தது. இதையடுத்து முன்னாள் மாவட் டத் தலைவர் ஈ.அங்குலட்சுமி மாநாட்டின் கொடியை ஏற்றி வைத்தார். ஒன்றிய தலை வர் நாகராணி தலைமை தாங்கினார். எஸ். ஜானகி வரவேற்றார். மாநாட்டை துவக்கி வைத்து சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.பவித்ராதேவி உரையாற்றினார். ஒன் றிய செயலாளர் பா.லட்சுமி, பொருளாளர் சு.தனபாக்கியம் ஆகியோர் அறிக்கைகளை முன் வைத்தனர். இம்மாநாட்டில், திருப்பூர் மாநகரம் மற் றும் ஒன்றிய பகுதிகளில் குண்டும், குழியு மாக உள்ள சாலைகளை செப்பனிட வேண் டும். ஊராட்சி பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனையை கண் காணித்து முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும். நியாயவிலைக் கடைகள் அமைக்க வேண்டும். குடியிருப்புகளில் குடி நீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். திருப்பூர் பேருந்து நிலையத்தில் மாலை நேரத்தில் மின் விளக்குகள் எரியாமல் இரு ளாக இருப்பதால் பெண்களுக்கு பாது காப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக பேருந்து நிலையத் தில் உள்ள மின் விளக்குகளை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து மாதர் சங்கத்தின் ஒன்றியத் தலைவராக எஸ்.ஜானகி, துணைத் தலைவராக நாகராணி, செய லாளராக பா.லட்சுமி, துணைச் செயலாள ராக பி.இந்திராணி, பொருளாளராக டி. பாரதி மற்றும் 12 பேர் கமிட்டி உறுப்பினர் களாக தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக, இம்மாநாட்டை வாழ்த்தி சிஐடியு பனியன் தொழிலாளர் சங்க தலை வர் சி.மூர்த்தி, மாதர் சங்கத்தின் மாநில துணைச்செயலாளர் ஜி.சாவித்ரி ஆகியோர் உரையாற்றினர். மாநாட்டின் முடிவில் மாதர் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் வி. பிரமிளா நிறைவுரை ஆற்றினார்.