districts

img

குழந்தைகளை துன்புறுத்தும் போலிச்சாமியார் ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சி புகார்

ஈரோடு, மார்ச் 4- பவானி அருகே குழந்தைகளைத் துன்பு றுத்தி வரும் போலீச்சாமியார் மீது நடவ டிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் புகார் அளித்த னர்.  ஈரோடு மாவட்டம், பவானி அருகே தொட் டிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில்,  சாமியார் ஒருவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர், குழந்தைகளை, குழந்தைகளுக்கு சூடு வைப்பது, செருப்பு  காலால் உதைப்பது போன்ற சித்ரவதை களை செய்கிறார். வெயிலில் குழந்தைகள் மயக்கமடையும் வரை நிற்க வைத்து கொடு மைப்படுத்தும் நிகழ்வு நடந்துள்ளது. மேலும்  இரவில் மதுபோதையில். வீட்டில் தாளம் அடிப்பது, பேய் போல் கத்துவது என அருகில்  வசிப்பவர்களை தூங்கவிடாமல் செய்வது  உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபடுகிறார். இதுகுறித்து யாராவது கேட்டால் நாங்கள் பாஜகவில் உள்ளோம் ஆர்எஸ்எஸ்-ல் உள் ளோம் என்கின்றார். அப்பகுதியில் உள்ள மக்கள் கேள்வி எழுப்பினால், எங்கள் வீட் டில் நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய் வேன் என மிரட்டல் விடுகிறார்.  இந்நிலையில், போலி சாமியார் மீது சட் டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் பி.மாரிமுத்து, பி.பி.பழனிசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.ஜெகநாதன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பா.லலிதா,  தலைவர் பி.எஸ்.பிரசன்னா, இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத் தலைவர் பிரகாஷ்,  வாலிபர் சங்க நிர்வாகிகள் கோபால் உள்ளிட் டோர் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைக ளின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.