திருப்பூர், ஆக.5- சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் கடன் வசதியாக்கல் முகாமில் 1448 நபர் களுக்கு ரூ.417.66 கோடி மதிப்பீட்டில் கடன் வசதிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் ஆகியோர் வழங்கினர். மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்ச்சியில், துணை மேயர் ரா.பாலசுப்பிரம ணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்கு நர் அ.லட்சுமணன், திட்ட இயக்குநர் (மகளிர்த்திட்டம்) சோ.வர லட்சுமி, மாவட்ட தொழில் மைய மேலாளர் இராமலிங்கம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சி.வீரரவி, மாவட்ட மேலாளர் (தாட்கோ) ரஞ்சித்குமார், உள்ளாட்சி அமைப்பு பிர திநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.