நாமக்கல், ஜூன் 16- பக்ரீத் பண்டிகை மற்றும் திருவிழாக் களை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கால்நடைகள் சந்தையில் லட்சங்களை கடந்து, கோடி ரூபாய் அளவில் வர்த்தகம் நடைபெற்றது. பக்ரீத் திருநாளில் ஆடு, ஒட்டகம் போன்றவற்றை இஸ்லாமியர்கள் குர்பானி கொடுப்பது வழக்கமாகும். இதனிடையே, திங்களன்று (இன்று) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், நாமக்கல் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள வாரச் சந்தையில் சனியன்று ஆடுகள் விற் பனை நடைபெற்றது. சேலம், திருச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட பல் வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆடு கள் விற்பனைக்காக கொண்டுவரப் பட்டிருந்தன. எடைக்கு தகுந்தவாறு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.45 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனையாகின. சிறிய ஆடுகள் ரூ.5 ஆயிரம் முதல் விற்பனை யானது. பக்ரீத் நாளையொட்டி வியா பாரிகள் வெள்ளாடுகள், செம்மறி ஆடு களை அதிகளவில் வாங்கி சென்றனர். ஒரேநாளில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற் பனை நடைபெற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கொங்கணாபுரம் பிரசித்திபெற்ற சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில் கால்நடை சந்தை இயங்கி வருகிறது. இங்கு வாரந் தோறும் சனியன்று பசுக்கள், உழவுப் பணிக்கான காளைகள், இறைச்சிக் கான ஆடு, கோழிகள், பந்தய புறாக்கள், சண்டை சேவல்கள் விற்பனைக்குக் கொண்டுவரப்படுகின்றன. இச்சந் தைக்கு சேலம் மட்டுமின்றி தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் அதிகம் பேர் வந்து, கால்நடைகளை வாங்கி செல்கின்றனர். அதன்படி, சனியன்று நடைபெற்ற சந்தைக்கு வழக்கத்தை விட கூடுதலாக, ஆடு, கோழி, மாடுகள் கொண்டு வரப்பட்டிருந்தன. தொடர்ந்து நடைபெற்ற விற்பனையில், 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.7 ஆயிரத்து 500 முதல் ரூ.9 ஆயிரம் வரையிலும், நாட்டுக் கோழி (உயிருடன்) கிலோ ரூ.400 முதல் ரூ.520 வரையிலும் விற்பனையானது. பக்ரீத் காரணமாக இந்த வாரம் நடை பெற்ற சந்தையில் ஒரே நாளில் ரூ.5 கோடி மதிப்பில் கால்நடைகள் விற்ப னையானதாக வியாபாரிகள் தெரி வித்தனர். நங்கவள்ளி இதேபோன்று மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளி சந்தையில் ஞாயிற் றுக்கிழமை தோறும் ஆடு, மாடுகள் விற் பனை செய்யப்படுவது வழக்கம். பக்ரீத் பண்டிகை என்பதால் இந்த வாரம் நடை பெற்ற ஏலத்தில், ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வாங்கவும், விற்கவும் அதிகளவில் குவிந்தனர். இதில் 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. 10 கிலோ கொண்ட ஆட்டு கிடாய் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. பக்ரீத் பண்டிகைக்காக ஆடுகளை வாங்க ஏராளமானோர் குவிந்ததால், ஆடுகள் விலை ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை உயர்ந்து விற்பனையானது. சந்தை துவங்கிய இரண்டு மணி நேரத் தில் ரூ.2 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.