மகாத்மா காந்தி நினைவு நாளில் உறுதியேற்பு
உதகை, ஜன. 30- ஒவ்வொரு மூச்சின் முன் பகு தியிலும் ஹே..ராம் என்கிற சொல்லை வாழ்நாள் முழுவதும் உச்சரித்து வந்த மாகத்மா காந் தியை சுட்டுக்கொன்ற இந்துத் துவ கோட்சே கும்பலை விரட்டி யடிப்போம், மதவெறியை மாய்த்து மனிதம் காப்போம் என காந்தி நினைவு நாள் உறுதி யேற்பு நிகழ்வு பல்வேறு பகுதி களில் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் ஊட்டி சேரிங் கிராஸ் பகுதியில், காந்தி நினைவு நாள் உறுதியேற்பு நிகழ்வு நடைபெற்றது. அப்பகு தியில் உள்ள மகாத்மா காந்தி யின் சிலைக்கு மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயற்குழு உறுப்பி னர் மதுக்கூர் ராமலிங்கம் தலை மையில் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தும் நிகழ்வு நடை பெற்றது. இந்நிகழ்வில், மார்க் சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட் டச் செயலாளர் வி.ஏ. பாஸ்க ரன், தீக்கதிர் கோவை பதிப்பு மேலாளர் மாணிக்கம் மற்றும் தலைவர்கள் நவீன் சந்திரன், உதகை தாலுகாச் செயலாளர் சங்கரலிங்கம், வினோத், சுந் தரம், சுரேஷ் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.
கோவை
மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாளையொட்டி கோவை பாப்பநாயக்கன் பாளையம் காந்தி மண்டபத்தில் உள்ள காந்தி சிலைக்கு, தமிழக மக்கள் ஒற் றுமை மேடை (கோவை) சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதி மொழி ஏற்கப் பட்டது. இந்நிகழ்வில், மார்க் சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் சி.பத்மநா பன், செயற்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம், தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகி ருட்டிணன், சிபிஎம் கிழக்கு நகரச் செயலாளர் என்.செல்வராஜ், சிபிஎம் மாமன்ற உறுப்பினர்கள் பூபதி, கண்ணகி ஜோதிபாசு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோவை மாவட்டச் செயலாளர் ஆறுச்சாமி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜோதி மணி, செயலாளர் வழக்கறிஞர் சுதா, தமுஎகச மாவட்டத் தலை வர் தி.மணி, புரட்சிகர இளை ஞர் முண்ணனி மலரவன், திரா விட சுயமரியாதை கழகம் நேரு தாஸ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இதேபோன்று, கோவை டவுன் ஹால் மாநக ராட்சி அலுவலகம் முன்பு காந்தி யடிகளின் நினைவு நாள் அனுச ரிக்கப்பட்டது. இதில் மகாத்மா காந்தியடிகளின் சிலைக்கு மாலை அணிவித்து மத நல்லி ணக்க உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் சிஐடியுவின் மாவட்டச் செயலா ளர் கிருஷ்ணமூர்த்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் தினேஷ் ராஜா, சிபிஎம் மேற்கு நகரக்கு ழுச் செயலாளர் பி.சி.முருகன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஆனைமலை ஒன்றியக் குழு சார்பில் அண்ணா நகர் பகுதியில் மகாத்மா காந்தி நினைவு நாள் அனுசரிக்கப் பட்டது. இந்த நிகழ்வில் தாலுகாச் செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோவை புலிய குளத்தில் நடைபெற்ற உறுதி யேற்பு நிகழ்வில், சர்வகட்சி அமைப்புக்குழுவின் செயலாளர் எஸ்.பாலமுருகன், சிபிஎம் த.நாக ராஜ், காங்கிரஸ் கட்சியின் எம்.எஸ்.பார்த்திபக்குமார், திராவிடர் கழகம் வீரமணி, எம்டிஎம்கே கே.த.மணிகண்டன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
ஈரோடு
அந்தியூரில் மகாத்மா காந் தி-க்கு நினைவு அஞ்சலி செலுத் தப்பட்டது. தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழுவின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ஹாத் திம்தாய் தலைமை வகித்தார். பல்தேவ், மாரிமுத்து, முஸ்தபா, பழனிச்சாமி ஆகியோர் முன் னிலை வகித்தனர். சிபிஎம் தாலுகாச் செயலாளர் ஆர்.முரு கேசன் அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்போம், மத வெறியை மாய்ப்போம் என்ற தலைப்பில் உறுதிமொழியை வாசித்தார். ஜலாலுதீன், கான், ஜாவித், ஜாகிர் மற்றும் திரளான மக்கள் கலந்துகொண்டு அஞ் சலி செலுத்தி உறுதி மொழி எடுத் துக் கொண்டனர். முடிவில், சார் லஸ்ராஜா நன்றி கூறினார். கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் முன்பு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிக ளின் சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடை பெற்றது திமுகவின் மாவட்டச் செயலாளர் நல்லசிவம் தலைமை யில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பி னர் வெங்கடாசலம் முன்னிலை யில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி யில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட், மனிதநேய மக்கள்கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட திமுகவின் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்ற னர். கோபி தெற்கு ஒன்றிய செய லாளர் சிறுவலூர் முருகன், சிபிஐ கனகராஜ், முஸ்லிம் முன்னேற்ற கழக நிர்வாகி சம்சுதின், நம்பி யூர் மெடிக்கல் செந்தில்குமார், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகி கள் என பலர் கலந்து கொண்ட னர். தருமபுரி தமிழ்நாடு மக்கள் சமூக நல் லிணக்க மேடையின் சார்பில் பென்னாகரத்தில் மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு உறு திமொழி ஏற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரா.சிசுபாலன் தலைமை வகித் தார். திமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் காளியப்பன், திரா விடர் கழக மாநில பொதுக்குழு உறுப்பினர் தீர்த்தகிரி, தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட் டச் செயலாளர் சந்தோஷ்குமார், விசிகயின் மாவட்டச் செயலாளர் கருப்பண்ணன், தமுமுக பென் னாகரம் பொறுப்பாளர் ஜாகீர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பென்னாகரம் தொகுதிச் செயலாளர் ரவி, பென்னாகரம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஜி.சக்திவேல், மாவட்ட குழு உறுப்பினர்கள் எம்.குமார், கே.அன்பு, ஆ.ஜீவானந்தம் மற்றும் பென்னாகரம் பேரூ ராட்சி கவுன்சிலர்கள் புவனேசன் கமலேசன் ஷானு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்
திருப்பூர் மாநகராட்சி வளா கத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பாக செவ்வாயன்று காலை இந்த நிகழ்ச்சி நடைபெற் றது. இதில் திருப்பூர் தெற்கு எம்எல்ஏ க.செல்வராஜ், திருப்பூர் மாநகர மேயர் ந.தினேஷ்குமார், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண் ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயற்குழு உறுப்பி னர் எம்.ரவி, இந்திய தேசிய காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன், இந்திய தேசிய லீக் மாவட்டத் தலைவர் சையது முஸ்தபா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யின் மாவட்டச் செயலாளர் தமிழ் வேந்தன் உள்பட தோழமைக் கட்சிகளைச் சேர்ந்தோர் பெருந் திரளாகப் பங்கேற்று மத நல்லி ணக்க உறுதிமொழி ஏற்றனர்.
சேலம்
சேலம் மாவட்டம் சிறு பான்மை நலக்குழு சார்பாக ஜன வரி 30 மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்பு நடைபெற் றது. இந்த கூட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பின் ஷேக் அப்துல்லா மற்றும் மாநில குழு உறுப்பினர் ஜோசப், மாவட்ட குழு உறுப்பி னர் எஸ். எம். தேவி,மாநில செயற்குழு உறுப்பினர் ஞானசெ ளந்தரி உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர்.
நாமக்கல்
தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில், மகாத்மா காந்தியின் நினைவு நாள் பயங் கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியாக ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே நடை பெற்றது. இதில் மதிமுக மாவட்ட அவைத் தலைவர் ஜோதிபாசு, மனிதநேய மக்கள் கட்சி மாவட் டச் செயலாளர் ராஜா முகமது, இந்திய தேசிய காங்கிரஸ் நகரத் தலைவர் ஸ்ரீராமலு முரளி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் செல்வராசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலா ளர் மணிமாறன், நகரக்குழு உறுப் பினர் பயாஸ், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் சி.சண்முகம், இந்திய ஜனநா யக மாதர் சங்க மாவட்டத் தலை வர் ராணி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலா ளர் அக்பர் பாஷா, மமக நகரத் தலைவர் ரப்பாணி(எ)சாதிக் பாஷா,மமக நகரச் செயலாளர் நிசார் பாஷா, ஊடக அணி பொருளாளர் சலீம் மாலிக் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.