கோவை, ஜூன். 5– அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட பொருளாளராக செயல்பட்டு வந்த தோழர் மணி வண்ணனின் முதலாம் ஆண்டு நினைவு படத்திறப்பு மற்றும் கருத்தரங்கம் ஹோட்டல் ஸ்ரீராம் இன்டர்நேஷனல் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் மாசேதுங் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் மறைந்த தோழர் மணிவண்ணன் படத்தை தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்கறிஞர் கூட்ட மைப்பு சங்கத்தின் மாநிலத்தலைவர் நந்தகுமார் திறந்து வைத்தார். இதில், வழக்கறிஞர் சங்க செயலாளர் கலையர சன் மற்றும் சிவசாமி தமிழன், கோபால் சங்கர், மயில்வாக னன், கனகராஜ், வழக்கறிஞர் சீலாராஜ், சுந்தரமூர்த்தி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் பங் கேற்று உரையாற்றினர். முன்னதாக நடைபெற்ற கருத்த ரங்களில் தேசத்துரோக சட்டமும் தேசமும், ஜனநாயகமும் நீதிமன்றங்களும் என்கிற தலைப்பில் பியுசிஎல் அமைப்பின் தேசிய குழு உறுப்பினர் பாலமுருகன் மற்றும் மு.ஆனந்தன் ஆகியோர் உரையாற்றினர். இதில் வழக்கறிஞர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் கள் ஜோதிகுமார், ராமர் உள்ளிட்ட ஏராளமான வழக்கறி ஞர்கள் பங்கேற்றனர்.