கோவை, பிப்.23– பஞ்சாலை தொழிலாளர்களின் உரிமைப் போராளியும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தோழருமான மறைந்த எம்.நஞ்சப்பன் நினை வகம் திறப்பு விழா வெள்ளியன்று கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் நடைபெற்றது கோவை மாவட்ட பஞ்சாலை தொழிலா ளர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாள ராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவராகவும் செயல்பட்ட வர் தோழர் எம்.நஞ்சப்பன். இவரது நினை வாக கோவை பொள்ளாச்சி தேசிய நெடுஞ் சாலையில் ஒத்தக்கால் மண்டபம் பிரிமியர் மில்ஸ் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுக்கரை தாலுகா கமிட்டி சார்பில், எம்.நஞ்சப்பன் நினைவகம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா வெள்ளியன்று நடைபெற் றது. மார்க்சிஸ்ட் கட்சியின் மதுக்கரை தாலு காச் செயலாளர் எம்.பஞ்சாலிங்கம் தலைமை ஏற்றார். சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சுப்பிரமணியம் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி ஆர்.நடராஜன் பங்கேற்று எம்.என் நினைவகத்தை திறந்து வைத்து உரையாற் றினார். அலுவலகத்தின் கல்வெட்டை மாவட் டச் செயலாளர் சி.பத்மநாபன் திறந்து வைத் தார். முன்னதாக, மறைந்த முன்னாள் கிளைச் செயலாளர் ஆத்து பொள்ளாச்சி என்ற எம். சுப்ரமணியம் மற்றும் எம்.நஞ்சப்பன் அவர்க ளின் படம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம், தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் வி.ஆர்.பழனிசாமி, மாவட்டத் தலைவர் இளங்கோவன் ஆகியோர் வாழ்த்தி பேசி னர். இதில், சிபிஎம் தெற்கு நகரக்குழு செயலா ளர் நாகேந்திரன், பாலர் சங்க மாநில ஒருங் கிணைப்பாளர் என்.அமிர்தம், சிபிஎம் கோவை மாநகராட்சி மாமன்றக்குழு தலைவர் வி.ராம மூர்த்தி, விவசாயிகள் சங்க பொறுப்பாளர் எஸ்.கருப்பையா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். முடிவில், ஜிகேடி கிளைச் செய லாளர் ஆர்.சீதாபதி நன்றி கூறினார்.