திருப்பூர், ஜூன் 18- உடுமலைபேட்டை அருகே சனி யன்று பெய்த கனமழையில் குழிப் பட்டி மலைவாழ் மக்கள் செட்டில் மெண்டில் உள்ள தொடக்கப் பள்ளி கட் டிடம் இடிந்தது. அப்போது அங்கு யாரும் இல்லாததால் விபத்து தவிர்க் கப்பட்டது. உடுமலைபேட்டை மலைப் பகுதி குழிப்பட்டி செட்டில்மெண்டில் மலை வாழ் குழந்தைகள் படிப்பதற்கு தொடக்கப் பள்ளி உள்ளது. ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 60 குழந்தைகள் படித்து வந்தனர். ஆனால் பள்ளிக் கட்டிடம் சிதிலம் அடைந்திருப் பதால் கடந்த பல ஆண்டுகளாக செயல்படாமல் முடக்கி வைக்கப்பட் டுள்ளது. இதனால் ஏராளமான குழந் தைகள் பள்ளிக்குச் செல்வது தடைப் பட்டுள்ளது. குழிப்பட்டி பள்ளியை சீர மைத்து செயல்படுத்தினால் இந்த குழந்தைகள் மீண்டும் தொடக்கக் கல்வி பெறக்கூடிய வாய்ப்பு ஏற்படும். எனவே, உடனடியாக இப்பள்ளியை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் வலியுறுத்தி வந்த னர். இங்குள்ள ஆசிரியர்கள் தங்குவ தற்கான அறையும் மோசமாக பாதிக் கப்பட்டிருப்பதால் ஆசிரியர்களும் வரத் தயங்கும் நிலை உள்ளது. இப்பள்ளியை சீரமைத்து செயல் படுத்தினால் ஒரு தலைமுறை குழந் தைகளின் கல்வி வாய்ப்பு மேம்படும் என்று மலைவாழ் மக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், சனிக்கிழமை மதியம் பெய்த கனமழையில் குழிப் பட்டி தொடக்கப் பள்ளியின் முகப்புப் பகுதி மேற்கூரை இடிந்து விழுந்தது. அப்போது யாரும் அங்கு இல்லாத தால் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த பள்ளியின் சிதிலமடைந்த நிலை குறித்து கடந்த டிசம்பர் 22ஆம் தேதி தீக்கதிர் நாளேட்டில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. மாவட்ட நிர் வாகம் இப்பள்ளியை சீரமைக்க நட வடிக்கை எடுத்திருந்தால் மாணவர்க ளுக்கு கல்வி வாய்ப்பு கிடைத்திருக் கும், இப்போது நேரிட்ட விபத்தும் தவிர்க்கப்பட்டிருக்கும் என்று மலை வாழ் மக்கள் கூறினர்.