districts

img

அடையாள அட்டை வழங்க வலியுறுத்தி கூட்செட் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம், மார்ச் 24- ரயில்வே கூட்செட் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் கூட்செட் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்செட் சுமைப்பணி தொழிலா ளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். பிஎப், இஎஸ்ஐ உள்ளிட்ட சட்ட சலுகைகளை அமல் படுத்த வேண்டும். இரவு நேரத்தில் பணி செய்ய வற்புறுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி, சிஐடியு சேலம் ரயில்வே ஏற்றுமதி - இறக்கு மதி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ரயில்வே கூட்செட் சுமைப்பணி தொழி லாளர்கள் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் தலைவர் ஆர்.வெங்கடபதி தலைமை வகித்தார். இதில், சிஐடியு மாவட்ட செயலாளர் டி.உதயகுமார், சுமைப்பணி தொழிலாளர் சங்க செயலாளர் ஏ.கோவிந்தன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.