திருப்பூர், ஜூன் 3– திருப்பூரில் 16ஆவது ஆண்டாக, நிட் டெக் 2022 பின்னலாடை இயந்திரக் கண் காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. திருப்பூர் அருகே திருமுருகன் பூண்டி சுற்றுச் சாலையில் அமைந்துள்ள ஹைடெக் இன்டர்நேஷனல் வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில் ஆசியாவின் மிகப் பெரிய இந்த கண்காட்சியை இந்திய ஏற்றுமதியா ளர் கூட்டமைப்பின் தலைவர் ஏ.சக்திவேல் தொடங்கி வைத்தார். முன்னதாக நிட்டெக் 2022 தலைவர் எம்.ஏ.ராயப்பன் வரவேற் றார். நிட்மா தலைவர் அகில் எஸ்.ரத்தின சாமி முன்னிலையில் கண்காட்சி கையேட்டை ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் வெளியிட சைமா தலைவர் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன் பெற்றுக் கொண்டார்.
திருப்பூர் சாயஆலை சங்கத் தலைவர் பி.காந்திராஜன், செயலாளர் முருகசாமி, டெக்பா தலைவர் ஸ்ரீகாந்த், சிம்கா தலைவர் விவேகானந்தன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். கண்காட்சியில் குளிரூட்டப்பட்ட இரண்டு மெகா அரங்குகள் அமைக்கப்பட் டுள்ளன. உள்நாட்டில் கோவை, திருப்பூர், லூதியானா, பெங்களூரு மற்றும் அமெ ரிக்கா, ஜெர்மனி, தைவான், சீனா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த 165 நிறுவனங்க ளின் ஆடை உற்பத்தி துறைக்கான அதிந வீன எந்திரங்கள் இடம் பெற்றுள்ளன. மொத் தம் 275 அரங்குகளில் நிட்டிங், டையிங், ரை சிங், காம்பாக்டிங், பிரிண்டிங், எம்ப்ராய்டரி, கட்டிங், தர ஆய்வு, செக்கிங், அயர்னிங், பேக்கிங் உள்ளிட்ட பின்னலாடைத் துறை யின் அனைத்து பிரிவுகளுக்கான எந்திரங் கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நிட்டிங் முதல் பேக்கிங் வரை பின்ன லாடை உற்பத்தி சார்ந்த அனைத்து பிரிவுக ளுக்கான நவீன எந்திரங்களும் ஒரே இடத்தில் இடம் பெற்றுள்ளன.
தொழில் நுட்ப பிரிவினர் எந்திரங்களின் இயக்கம், சாதக அம்சங்கள் குறித்து விளக்கிக் கூறி னர். திருப்பூர் மட்டுமல்லாது, தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற பின்னலாடை மையங்களில் இருந்தும் பார்வையாளர்கள் இங்கு வருகை தந்துள்ளனர். ஜூன் 6ஆம் தேதி முடிய நான்கு நாட்கள் இக்கண்காட்சி நடைபெறுகிறது. மொத்தம் 40 ஆயிரம் பேர் வரை கண்காட்சியை பார்வையிட்டு எந்திரங்கள் கொள்முதலுக்கு வர்த்தக விசாரணை நடத்துவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. நவீன தொழில்நுட்ப உத வியுடன் கூடிய எந்திரங்கள் மூலமாக ஆடை உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் இந்த கண்காட்சி உதவும் என்று தொழில்துறை யினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். துவக்க விழா நிறைவில் ஹைடெக் நிர் வாக இயக்குநர் ஆர்.சிபி சக்கரவர்த்தி நன்றி கூறினார்.