districts

img

ரத்தினபுரியில் பாலர் பூங்கா துவக்கம்

கோவை, ஜூலை 14- கோவை மாவட்டத்தின் ரத்தினபுரி, விளாங்குறிச்சி, செல்வபுரம் உள்ளிட்ட பகுதி களில் பாலர் பூங்கா துவங்கப் பட்டது.

கோவை மாவட்டம், எஸ். எஸ்.குளம் கிழக்கு கமிட்டி,  விளாங்குறிச்சி பகுதியில்  ஞாயிறன்று ஜவஹர்லால் நேரு பாலர் பூங்கா துவங் கப்பட்டது. இதன் ஒருங்கி ணைப்பாளராக கல்யாணி மற்றும் பொறுப் பாளர்களாக வர்ஷிகா, லக்ஷதன், சுபாஷினி,  சுதிக்ஷன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதேபோல, ரத்தினபுரி பகுதியில் அப்துல் கலாம் பாலர் பூங்கா துவங்கப்பட்டு, ஒருங் கிணைப்பாளராக நிஷா மற்றும் பொறுப் பாளர்களாக தனுஸ்ரீ, திவ்யதர்ஷினி, உமா தேவி, ரியா, பிரஜூல் ஆகியோர் தேர்வு செய் யப்பட்டனர். 

பேரூர், செல்வபுரம் பகுதியில் காம ராஜர் பாலர் பூங்கா அமைக்கப்பட்டது. ஒருங் கிணைப்பாளராக சுதர்சன் மற்றும் பொறுப் பாளர்களாக சபீரா, தர்ஷன், ஷியாத் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் பாலர் பூங்காவில் உறுப்பினர்க ளாக இணைந்துள்ளனர். இந்நிகழ்ச்சிகளில் பாலர் பூங்கா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உஷா, நிர்வாகிகள் என்.ஆர்.முருகேஷன், மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.