தோழர் அ.ப.வின் ஏழாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி சிபிஎம் இடுவாய் அலுவலகத்தில் கருப்புசாமி தலைமையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி நினைவேந்தல் உரையாற்றினார். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரன், நட்ராஜ், கிளை செயலாளர்கள் அ.ப.ரத்தினசாமி சுந்தரம், விசைத்தறி சங்க மாநிலக்குழு உறுப்பினர்கள் குட்டி என்கிற மோகன், சுந்தரம், புதுப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் ஒன்றிய கமிட்டி உறுப்பினர் அங்கு லட்சுமி மற்றும் தோழர் அ.ப. குடும்பத்தினர் உட்பட பலர் பங்கேற்று மலரஞ்சலி செலுத்தினர்.