ஈரோடு, ஜன. 18- ஈரோட்டில் பெண்கள் மட் டுமே பங்கேற்று, உற்சாகத்து டன் காணும் பொங்கலைக் கொண்டாடினர். தை பொங்கல் பண்டிகை யின் மூன்றாவது நாளில் காணும் பொங்கல் கொண் டாடப்படுகிறது. மக்கள் அனைவரும் தனது நண்பர் கள் மற்றும் உறவினர்களுடன் சுற்றுலாத் தலங்களுக்கு சென்று, கொண்டாடி மகிழ்வர். அந்த வகையில், ஈரோடு மாவட்ட மக்கள் நீர்நிலைப் பகுதிகளான கொடிவேரி அணை, பவானிசாகர் அணை, காளிங்கரா யன் அணைக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றுகூடி காணும்பொங்கலை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த வரிசையில், ஈரோட்டில் மாநக ரில் வ.உ.சி.பூங்காவில் பெண்களுக்கான காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட் டது. இவ்விழாவில், ஆண்கள் யாருக்கும் அனுமதியில்லை. பூங்காவின் நுழைவு வாயில் பகுதியிலேயே ஆண்கள் மற்றும் 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் தடுத்து நிறத் தப்பட்டனர். இதனால், பூங்காவினுள் பெண் கள் மற்றும் சிறுவர், சிறுமிகள் மட்டுமே இருந் தனர். பிற்பகல் முதல் பூங்காவில் ஆயிரத் துக்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்தனர். கரும்பு, நொறுக்கு தீனிகள் உள்ளிட்ட உண வுப்பொருட்களை கொண்டு வந்து, தங்கள் தோழிகள் மற்றும் முகம் தெரியாத நபர்க ளுக்கு பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து, ஒலிப்பெருக்கிகள் வைத்து சினிமா பாடல்களை இசைக்க விட்டு, ஆட்டம் ஆடினர். மேலும், கோலாட்டம், பந்து போட்டு பிடித்தல், கண்கட்டி விளையாட்டு, கபடி, விரட்டிப்பிடித்தல் போன்ற விளையாட்டு களை விளையாண்டு உற்சாகமடைந்தனர்.