districts

img

சிபிஎம் பனமரத்துப்பட்டி ஒன்றியச் செயலாளராக கே.செவந்தியப்பன் தேர்வு

சேலம், அக் 21- மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட பனமரத்துப்பட்டி ஒன்றியச் செயலாளராக கே. செவந்தியப்பன் தேர்வு செய்யப் பட்டார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் பனமரத்துபட்டி ஒன்றிய 8 ஆவது மாநாடு மல்லூரில் நடை பெற்றது. கே.குமார் கொடியேற்றி வைத்தார்.  கே.செவந்தியப்பன் வரவேற்றார். மாநாட்டை துவக்கிவைத்து சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் பி.செல்வசிங் உரை யாற்றினார். வேலை அறிக்கையை ஒன்றியச் செயலாளர் கே.சுரேஷ் முன்மொழிந்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி. உதய குமார் வாழ்த்தி பேசினார்.  பனைமரத்துப்பட்டி பகுதியில் அதிக மாக பூக்கள் விளைச்சல் உள்ளதால் அவற்றை சந்தைப்படுத்த பனமரத்து பட்டி ஒன்றியத்தில் புதிய சந்தைப்படுத்தும் மையத்தை ஏற்படுத்த வேண் டும். பழமை வாய்ந்த பனமரத் துப்பட்டி ஏரியை சீரமைப்பு  செய்து சுற்றுலாத்தலமாக மாற்ற  வேண்டும். சந்தியூர் ஆட்டை யாம்பட்டி மற்றும் தாசநாயக் கன்பட்டி பகுதியில் செயல்படுத் தப்படும் மேம்பாலப் பணிகளை  விரைந்து முடிக்க வேண்டும்.  சந்தியூர் ஆட்டையாம்பட்டி உள்ளிட்ட பகுதி களில் சாலை சுகாதார வசதிகளை மேம்ப டுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழுவிற்கு 9  பேர் தேர்வு செய்யப்பட்டனர்.  செயலாள ராக கே.செவந்தியப்பன் தேர்ந்தெடுக் கப்பட்டார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன்.ரமணி மாநாட்டை நிறைவு செய்து உரையாற்றினார். கிளைச் செய லாளர் எஸ்.கருப்பண்ணன் நன்றி கூறினார்.