திருப்பூர், பிப். 28 - திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் உதவி யாளராக பணியாற்றிய அருண் மாரிமுத்து பணிச் சுமை காரணமாக தற் கொலை செய்து கொண்ட தாக உறவினர்கள் போராட் டம் நடத்தினர். இந்நிலையில், தமிழ் நாடு மாநில நீதித்துறை ஊழி யர்கள் சங்க அறிவுறுத்தலின் படி, திருப்பூர் மாவட்ட நீதித்துறை ஊழியர் கள் சங்கம் சார்பில் ஊழியர்களின் பணிச் சுமை சூழலை கவனப்படுத்தும் விதமாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளா கம் மற்றும் உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கேயம், அவிநாசி, பல்லடம், மற்றும் இதர தாலுகா நீதிமன்ற வளாகங்களில் வெள்ளியன்று பெருந்திரள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். நீதித்துறை ஊழி யர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொண்ட னர். ஆர்ப்பாட்டத்தை பின்னிட்டு அருண் மாரி முத்துவுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.