சேலம், ஏப்.3- தாரமங்கலம் நகர அதிமுக செயலாளரின் வீடு மற்றும் நகைக்கடையில் வருமான வரித் துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தினர். இந்த சோதனை முடிவில், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, விசாரணைக்காக அதிமுக நிர்வாகியை அழைத்து சென்றனர். சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகா, தாரமங்கலம் அதிமுக நகரச் செயலாளராக பாலசுப்பிரமணியம் செயல்பட்டு வருகிறார். மேலும், இவர் நகர்மன்ற உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார். இவரது வீட்டை ஒட்டியே இரண்டு நகை கடைகள் நடத்தி வருகிறார். இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக் காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொ ருட்கள் வழங்குவதற்காக, பாலசுப்பிரமணி யம் கோடிக்கணக்கான ரூபாய் பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறை அதி காரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பே ரில் வருமான வரித்துறை உதவி ஆணை யர் பிரதீப் தலைமையில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள், செவ்வாயன்று இரவு சோத னையை துவங்கினர். இரண்டு வீடுகள், இரண்டு நகை கடைகள், அவரது மகன் வீடு களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், குழு குழுவாக பிரிந்து அவருக்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனை செய்தனர். இரவு துவங்கி அதிகாலை வரை நடத்திய சோதனையில் கணக்கில் வராத தங்க நகைகள் கிலோ கணக்கிலும், பணம் என சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொ டர்ந்து அனைத்தையும் கணக்கீடு செய்த அதி காரிகள், கணக்கில் வராத கிலோ கணக்கி லான தங்க நகைகள் மற்றும் பணத்தை பறி முதல் செய்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்து வதற்காக அதிமுக நகரச் செயலாளர் பால சுப்பிரமணியம் மற்றும் அவரது மகன் பாஸ்கர் ஆகியோரை அதிகாரிகள் அழைத்து சென்ற னர். இதுகுறித்த தகவலறிந்த அதிமுக நிர் வாகிகள், உறவினர்கள் பாலசுப்பிரமணியம் வீட்டுக்கு அருகே ஒன்று கூடினர். அதனால், தாரமங்கலம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து பாலசுப்பி ரமணியத்திடம் கேட்டபோது, எவ்வளவு எடுத்து சென்றார்கள் என்பது தெரிய வில்லை, என்றார். வருமான வரித்துறை உதவி ஆணையர் பிரதீப் கூறுகையில், புகா ரின் பேரில் சோதனை செய்து கணக்கில் வரா தவற்றை பறிமுதல் செய்து எடுத்து செல்கி றோம். விசாரணை முடிவில் தான் மொத்த மதிப்பு தெரிய வரும், என்றார்.