districts

img

ஜேசிபி வாகன உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

சேலம், மே 27 – டீசல் விலை உயர்வு, உதிரிபாகங்கள் விலை உயர்வு  மற்றும் சாலை வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங் களால் வாடகையை உயர்த்தக்கோரி சேலத்தில் ஜேசிபி  வாகன உரிமையாளர்கள் இரண்டு நாள் அடையாள  வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஜேசிபி வாகனங்கள் இயங்கி வருகின்றன. அதிக ரித்து வரும் செலவினங்களைக் காரணம் காட்டி,  இந்த வாகனங்களின் வாடகையை உயர்த்த உரிமையா ளர்கள் முடிவு செய்துள்ளனர். தங்களது கோரிக்கையை பொதுமக்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் தெரி யப்படுத்தும் விதமாக, சேலம் மாவட்ட ஜேசிபி உரிமை யாளர்கள் இன்று (மே 27) மற்றும் நாளையும் (மே 28)  என இரண்டு நாட்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் கோரிமேடு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட  ஜேசிபி வாகனங்களை நிறுத்தி வைத்து, வாடகை உயர்வை வலியுறுத்தி உரிமையாளர்கள் கோஷங் களை எழுப்பினர். முன்னதாக ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 என வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு  மணி நேரத்திற்கு ரூ.1300 ஆக வாடகை உயர்த்தப் பட்டுள்ளதாகவும், குறைந்தபட்ச வாடகை ரூ.3500 ஆக  உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இப்போராட்டத்திற்கு சேலம் மாவட்ட ஒருங்கி ணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தங் களது ஆதரவைத் தெரிவித்து போராட்டத்தில் கலந்து  கொண்டனர்.