உடுமலை, மார்ச் 25- உடுமலை, மலைப்பகுதி யில் பெய்த கனமழையி னால் குளிப்பட்டி வன குடியிருப்பில் மண் சுவ ரால் கட்டப்பட்டிருந்த வீடு இடிந்து விழுந்ததில் முதிய வர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், உரிய சாலை வசதியில்லாததால் தொட்டில் கட்டி மருத்துவ மனைக்கு தூக்கி செல்லப்பட்டார். உடுமலை அருகே மலைப்பகுதியில் உள்ளது குளிப்பட்டி வன குடியிருப்பு. கடந்த (மார்ச் 23) வியாழனன்று பெய்த கனமழை காரணமாக மண் சுவரால் கட்டப்பட்டிருந்த வீடு இடிந்து விழுந்தது. இதில், பழனி என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி படு காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தி னர் மீட்ட நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு போதிய சாலை வசதி இல்லாததால் பெரும் சிரமத்திற்குள் ளாகினர். குறிப்பாக, அப்பர் ஆழியாறு அணை வழியாக சென்றால் 7 மணி நேரத் திற்கும் மேலாகும் என்பதால், குளிபட்டி லிருந்து பொன்னால் அம்மன் சோலைக்கு தொட்டில் கட்டி தூக்கி சென்றனர். முன்னதாக, இப்பகுதி மக்கள் இங்கி ருந்து உடுமலைப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு செல்வதற்கு போதிய சாலை வசதி இல்லாததால் இதுபோன்று தொடர்ச்சியான பல சம்பவங்கள் நடை பெற்று வருகிறது.
2006 வன உரிமைச் சட்டப்படி ஒரு ஹெக்டர் நிலம் ஒதுக்கி திருமூர்த்தி மலையிலிருந்து குரு மலைக்கு சாலை அமைத்தால் அரை மணி நேரத்தில் மலை பகுதியிலிருந்து திரு மூர்த்தி மலை வந்தடைய முடியும். ஆகவே, வன உரிமைச் சட்டப்படி சாலை கேட்டு மலைவாழ் மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து உயர் அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியரும் மலைவாழ் மக்க ளுக்கு சட்டப்படி சாலை அமைப்பதற்கு முயற்சி எடுத்தாலும், உடுமலை வனச்சர கத்தில் இருக்கக்கூடிய வனச்சரகர் சாலை அமைக்க தடையாக இருந்து வருகிறார். வன உரிமை சட்டப்படி சாலை அமைத்தால் மலைவாழ் மக்களின் உயிர்கள் பாதுகாக் கப்படும் மற்றும் மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கான கல்வியும் கிடைக் கும். மேலும், வனப்பகுதியில் குற்றங்கள் ஏற் பட்டால் வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து தடுக்கவும், வனத் தீ ஏற்பட்டால் உடனே வந்து அணைக்கவும் முடியும். ஆனாலும், உடுமலை வனச்சரக அதிகாரி மலைவாழ் மக்களுக்கு சாலை அமைப்ப தில் ஆர்வம் காட்டுவதில்லை.எனவே, அதி காரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு மலைவாழ் மக்களுக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தர வேண்டுமென அப்பகு தியை சுற்றியுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.