மார்க்சிய தத்துவத்தை கொச்சைப்படுத்தியதை கண்டித்தும், தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக பேசி வருவதைக் கண்டித்தும், கடந்தாண்டு உதகை வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முற்றுகையிட சிபிஎம், சிபிஐ, மக்கள் அதிகாரம் ஆகிய கட்சியினர் திரண்டனர். மூன்று பிரிவுகளில் போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்த நிலையில், வழக்கு உதகை நீதிமன்றத்தில் திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இத்தகைய வழக்குகளால் போராட்டங்களை முடக்க முடியாது எனவும், தமிழக ஆளுநருக்கு எதிரான இடதுசாரிகளின் போராட்டம் மேலும் வலுவாக தொடரும் என்பதை ஆட்சியாளர்களுக்கு உணர்த்தும் விதமாக சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி உள்ளிட்டோர் செஞ்சட்டையுடன் வழக்கில் ஆஜராகினர்.