திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதி மொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.ஜெய்பீம் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல் ஹமீது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.