districts

img

மக்கள் விரோத மோடி அரசின் கொள்கையை கண்டித்து 10 ஆயிரம் குழுக்கள் பிரச்சாரம்

தருமபுரி, ஜூலை 22- பாஜக தலைமையிலான மோடி அர சின் மக்கள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்தி ஒருவார காலம் பத் தாயிரத்திற்கும் மேற்பட்ட குழுக்கள் பங் கேற்கும் பிரச்சார இயக்கம் தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி நடத்த உள் ளதாக சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தருமபுரியில் செய்தி யாளர்களிடம் தெரிவித்தார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தமிழ்நாடு ‌மாநிலக்குழு கூட்டம் தரும புரியில் ஜூலை 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மாநிலக்குழு கூட்டத்தில்  எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய் தியாளர்களிடம் கூறுகையில், காவிரி பகுதியில் மிக அதிகமான மழை பெய் கிறது. அதிகளவில் உபரிநீர் கடலில் கலக்கிறது. எனவே, உபரியாக செல் லும் காவிரி நீரை வறண்டு கிடக்கும் தருமபுரி மாவட்டத்திற்கு கிடைக்கும் வகையில், நீரேற்றும் நிலையம் அமைத்து மாவட்டத்தில் உள்ள ஏரி களுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டம் குறித்து அரசு ஆய்வு செய்து நிறை வேற்ற வேண்டும்.

பொருளாதார கொடூர தாக்குதல்

மோடி அரசு அரிசிக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரியை விதித்துள்ளது. நடை முறையில் 30 சதவிகிதம் வரை ஜிஎஸ்டி வரியை போட்டுள்ளதாக தெரிகிறது. நயவஞ்சமாக எல்லோரும் சேர்ந்து எடுத்த முடிவு என்று ஒன்றிய பாஜக அரசு சொல்வது, உண்மைக்கு புறம் பானதாகும். அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட  கேரளா நிதி அமைச்சர் வரி உயர்வை ஏற்க முடியாது என எதிர்ப்பு தெரிவித்தார். இதனை கேரளா சட்ட மன்றத்திலும் சொல்லப்பட்டு, கேரளா முதல்வர் பினராயி விஜயன், ஒன்றிய நிதி அமைச்சருக்கு வரி உயர்வை ஏற்க முடியாது என்று கடிதம் எழுதினார். அரசிக்கு  ஜிஎஸ்டி வரிவிதித்திருப்பது, “மோடி அரசு மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்” ஆகும். நாடாளு மன்றத்தில் வரி விதிப்பு குறித்து கருத்து சொல்ல மக்கள் பிரதிநிதிகளுக்கு  அனு மதி மறுக்கப்படுகிறது. மக்கள் மீது மோடி அரசு பொருளாதார தாக்குதல் நடத்துகிறது. எனவே, அரசி மீது போடப் பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் வரும் ஜூலை 29 ஆம் தேதியன்று மத்திய அரசு அலு வலகங்கள் முன்பு மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மதவேறுபாடற்ற சுதந்திர போராட்டம்

இந்திய நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம். சுதந்திர போராட்டத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் என மத வேறுபாடு இல்லாமல் சுதந்திர போராட் டத்தில் பங்கு பெற்றனர். சுதந்திர போராட் டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் ஆர்எஸ்எஸ்-சும், பாஜகவும் தான்.  எண் ணற்றோரின் தியாகத்தால் போரடிப் பெற்ற சுதந்திர தினத்தை கோலாகல மாக கொண்டாடுவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளது. இதன் முதற்கட்டமாக சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் யூசுப் தாரிகாமி கலந்து  கொள்ள இருக்கிற கருத்தரங்கம் நடை பெற உள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி யன்று மார்க்சிஸ்ட் கட்சியின் அனைத்து கிளைகளின் சார்பில் கொடியேற்றி உறுதிமொழி நடைபெறும்.

மோடி அரசை கண்டித்து பிரச்சார இயக்கம்

தமிழக அரசு மீது புகார் கூறி, அடுத்த பெரிய கட்சி நாங்கள் என்று பாஜக மாநி லத் தலைவர் அண்ணாமலை கூறி வருகி றார். ஆனால், நூறு மடங்கு மக்களுக்கு  எதிரான மோசமான காரியங்களை ஒன் றிய அரசு செய்து வருகிறது. மோடி அர சின் மோசமான பொருளாதார நடவ டிக்கைகள், இந்துத்துவா என்ற அடிப்ப டையில் சிறுபான்மை மக்கள் மீது தாக்கு தல் தொடுக்கக்கூடிய தாக்குதலாகும். அதேபோன்று பத்திரிகை ஊடகத்தின் மீது தாக்குதல் நடத்தி, ஊடகவியலா ளர்களை கைது செய்வது போன்ற  செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இதை  கண்டித்தும், மக்களுக்கு எடுத்துச்சொல் லும் விதமாக தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரத்திற்கம் மேற்பட்ட குழுக்கள், ஒருவாரகாலம் வீடு, வீடாக மக்களை சந் திப்பது, மோடி அரசின் கார்ப்பரேட் பொருளாதார கொள்கை, இந்துத் துவா என்ற பெயரில் மதவெறியை ஏற் படுத்துவது குறித்து வளுவான  கண்டன இயக்கத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மின் கட்டண உயர்வு: பெருந்திரள் முறையீடு

தமிழக அரசு அறிவித்திருக்கிற மின் கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள முடி யாது. விலைவாசி உயர்வினால் மக்கள்  பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மின் கட்டண உயர்வு என்பது பெரும் சுமையை ஏற்படுத்தி விடும். மின்சார ஆணையம் மின்கட்டண உயர்வு குறித்து கருத்து கேட்டு வருகிறது மின் கட்டணம் உயர்த்தக்கூடாது என மின் சார ஆணையத்திடம் மார்க்சிஸ்ட் கட்சி  சார்பில் பெருந்திரள் முறையீடு செய் வது என்றும் முடிவு செய்யப்பட்டுள் ளது. அதையும் மீறி ஆணையம் கட்டண உயர்வு செய்தால், அப்போது என்ன செய்வது குறித்து முடிவெடுப்போம், என்றார். முன்னதாக, இப்பேட்டியின் போது  அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் நூர்முகமது, மாநிலக்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட்ட செய லாளர் ஏ.குமார் ஆகியோர் உடனிருந் தனர்.