districts

img

ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்

உடுமலை, மே 23- திருப்பூர் மாவட்டத்தில் உடு மலை, பொங்கலூர் பகுதிகளில் கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத் தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் துவக்கி வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்களன்று காணொலி காட்சி வாயி லாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி  திட்டத்தினை துவக்கி வைத்தார். உடு மலை வட்டம், ஜல்லிபட்டி ஊராட்சி யில் தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து நிலம் வைத்துள்ள 200 குடும்பங்களுக்கு  தலா 3 தென்னங்கன்றுகள், 15 விவசா யிகளுக்கு 75 சதவிகித மானியத்துடன் உழுந்து தலா 5 கிலோ, 5 விவசாயிக ளுக்கு ரூ.3 ஆயிரம் மானியத்துடன் விசைத்தெளிப்பான், 5 விவசாயிக ளுக்கு ரூ.750 மானியத்துடன் கைத் தெளிப்பான் வழங்கப்பட்டது. இவ் விழாவில் வேளாண்த்துறை திட்ட பொறுப்பு அலுவலர் வைரமுத்து, வேளாண் வணிகம், பொறியல், தோட் டக்கலைத்துறை உள்ளிட்ட துறை  சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண் டனர். பொங்கலூர் பொங்கலூர் ஊராட்சி, உகாய னூர் ஊராட்சியில் ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல் வராஜ், மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தலைமையில் 21 ஆயிரத்து 472 விவசாயிகளுக்கு ரூ.57.41 லட்சம் மதிப் பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் திருப்பூர் மாநக ராட்சி 4 ஆம் மண்டலக்குழு தலைவர் இல.பத்மநாபன், வேளாண்மை இணை இயக்குநர் (பொ) மகாதேவன், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் எஸ்.குமார், துணைத்தலை வர் அபிராமி அசோகன், உகாயனூர் ஊராட்சிமன்றத் தலைவர் ரேவதி கன கராஜ் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.