கோவை, டிச.30- கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து லங்கா கார்னர் பாலம் வரை 24 மணி நேர குடிநீர் குழாய் பதிக்கும் பணி புதனன்று துவங்கியது. கோவை ரயில் நிலையம், ஸ்டேட் பாங்க் சாலையில் 600 மீட்டர் தூரத்திற்கு குடிநீர் குழாய் பதிக்கும் பணி புதனன்று துவங்கியது. லங்கா கார்னர் பாலத்தில் இருந்து மாவட்ட அலுவலகம் ரவுண்டானா வரை இந்த பணி நடைபெற உள் ளது. இதற்காக ஸ்டேட் பாங்க் சாலை, அரசு கலைக் கல்லூரி சாலை மற்றும் இதற்கு இணையாக உள்ள சாலையில் புத னன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. சாலையில் குழி தோண்டி 800 மி.மீட்டர் விட்டம் கொண்ட குழாய் பதிக்கும் பணி துவங்கியது. சிறுவாணி குடிநீர் விநி யோகம் செய்வதற்காக மேற்கொள்ளப்படும் இப்பணியை 10 முதல் 12 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணி முடிந்தால் சுமார் 20 ஆயிரம் வீடுகளுக்கு தடை யின்றி குடிநீர் விநியோகம் செய்ய முடியும். ஆகவே, பணியை வேகமாக நடத்தி முடிக்க மாநகராட்சி ஆணை யாளர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார். உதவி பொறியாளர் ராமசாமி மேற்பார்வையில் பணிகள் நடை பெற்று வருகிறது. மேலும், போக்குவரத்து மாற்றம் செய்யப் பட்டால் மற்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் இல்லா மல் வாகனங்கள் சென்று வரும் வகையில் போக்குவரத்து காவல் துணை ஆணையர் செந்தில்குமார் தலைமையில் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரு கின்றனர்.