உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவு துவக்கம்
உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவு துவக்கம் பொள்ளாச்சி, மே 10- பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் புதி தாக உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட் டுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அரசு தலைமை மருத்து வமனையில் வெயில் காலத்தில் ஏற்படும் உடல் வெப்ப பாதிப்பிற்கு புதிதாக சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கண்கா ணிப்பாளர் மருத்துவர் ராஜா கூறியதாவது, பொள்ளாச்சி அரசு மருத்துவமையில் உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவில் குளிர்சாதன வசதி யுடன் கூடிய அறையில் 15 படுக்கையில் அமைக்கப்பட் டுள்ளன. மேலும் தினமும் சுழற்சி முறையில் ஆறு செவிலி யர்கள் பணியில் இருப்பார்கள் மற்றும் செவிலியர்கள் பயிற்சி மாணவிகள் அத்துடன் பொது மருத்துவர்கள், அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். இந்த ஆண்டு வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கோடை வெயிலினால் உடலில் அதிக வியர்வை வெளியேறும் போது உடலில் உப்பு சத்து மற்றும் நீர்ச் சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிகமாக தண் ணீர் தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், குறைந்த அளவு சிறுநீர் வெளியேறுதல், மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் என்பதால் அதற்குரிய சிகிச்சை அளிக்கவே உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
காவலர்கள் குறித்து அவதூறு ஒருவர் மீது வழக்கு
காவலர்கள் குறித்து அவதூறு ஒருவர் மீது வழக்கு கோவை, மே 10- கோவை மாநகர காவல் துறை ஒவ்வொரு மதத்தினருக் கும் ஏற்றபடி நடந்து கொள்வதாக காவல் துறையை விமர் சித்து யூடியூப்யில் வீடியோ வெளியிட்ட விவேகானந்தர் பேரவை அமைப்பின் தலைவர் ஜலேந்திரன் மீது காவல்து றையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவையில் விவேகானந்தர் பேரவை அமைப்பின் என்ற அமைப்பின் தலைவராக இருப்பவர் ஜலேந்திரன். இவர் இந்துக்களுக்கு ஒரு மாதிரியாகவும், மாற்று மதத்தினருக்கு ஒரு மாதிரியாகவும் நடைமுறைகளை காவல்துறை கடை பிடிக்கிறது உள்ளிட்டு வகுப்புவாத நடவடிக்கையை தூண்டி விடுவது போன்ற கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ, பொதுமக்கள் மட்டுமல்லாது போலீசார் மத்தி யிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, யூடியூப் வீடியோ காட்சி அடிப்ப டையில் பெரிய கடைவீதி காவல் நிலைய போலீசார் விவே கானந்தர் பேரவை அமைப்பின் தலைவர் ஜலேந்திரன் மீது கலகம் செய்ய தூண்டுதல், இரு வெவ்வேறு சமூகங்களு டைய வெறுப்புணர்வை தூண்டுதல் ஆகிய இரு பிரிவு களில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொழிலாளர்களை கொத்தடிமைகளாக பணியமர்த்தினால் 3 ஆண்டுகள் சிறை
தொழிலாளர்களை கொத்தடிமைகளாக பணியமர்த்தினால் 3 ஆண்டுகள் சிறை சேலம், மே 10- தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்தும் உரிமை யாளர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் அபரா தம் விதிக்கப்படும் என்று சேலம் தொழிலாளர் உதவி ஆணை யர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவே ணி தலைமையில், வருவாய்த்துறை, காவல் துறை, சுகாதா ரத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியோ ருடன் தொழிலாளர் துணை, உதவி ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் ஓமலூர், காமலாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டா ரப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். கடைகள், ஹோட் டல்கள், இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடைகள், இதர நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டதில், குழந்தைத் தொழிலாளர்கள், வளரிளம் பருவத்தினர் எவரும் பணிய மர்த்தப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது. 14 வயதுக் குட்பட்ட குழந்தைகள், 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை பணியில் அமர்த்துவது குற்றமாகும். அவ் வாறு பணியமர்த்தினால் நிறுவன உரிமையாளர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும். அதேபோல் தொழி லாளர்களைக் கொத்தடிமைகளாகப் பணிக்கு அமர்த்துவது குற்றமாகும். அவ்வாறு தொழிலாளர்களை நடத்தும் நிறுவன உரிமையாளர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் அபராதம் விதிக்கப்படும் என தொழிலாளர் உதவி ஆணை யர் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார்.
கஞ்சா கடத்தியவர்கள் கைது
கஞ்சா கடத்தியவர்கள் கைது பொள்ளாச்சி, மே 10- பொள்ளாச்சி மற்றும் கருமத்தம்பட்டி ஆகிய பகுதிக ளில் கஞ்சா கடத்தி விற்பனை செய்ய முயன்ற ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். ஆனைமலை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட தாத்தூர் பிரிவில் போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப் போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து விசா ரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் பீகாரை சேர்ந்த முகம்மது சகப்தீன்(50), ஆரிப் ராஜா(20) கல்லூரி மாணவர் என தெரியவந்தது. இவர்களிடம் நடத்திய மேல் விசார ணையில், பீகாரில் இருந்து ரயில் மூலம் கஞ்சா வாங்கிக் கொண்டு கோவையில் இறங்கி இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திக் கொண்டு வந்து பொள்ளாச்சி வழியாக கேரளா வில் விற்பனை செய்வதற்கு கொண்டு செல்வதாக தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து கடத்தி வந்த 8,400 கிலோ கஞ்ச வும், 3,100 கஞ்சா சாக்லெட்டும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு. தந்தை மகன் இருவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதேபோன்று, கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா விற்ப னைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்ப டையில் கருமத்தம்பட்டி காவல் நிலைய காவல்துறையினர் சோமனூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று சோதனை மேற்கொண்டு போது கஞ்சாவை விற்பனைக்கு வைத்தி ருந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கோபி (27) , சக்தி வேல்(26) மற்றும் ஐகோர்ட் மகாராஜன்(22) ஆகியோர் களை கைது செய்து அவர்களிடமிருந்து 6 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்களை நீதிமன்ற காவ லுக்கு உட்படுத்தினர்.
திருப்பூரில் குடிநீர் திட்டப்பணி: தாராபுரம் சாலையில் போக்குவரத்து மாற்றம்
திருப்பூர், மே 10 – திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அரு கில் இருந்து தாராபுரம் சாலையில் குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் வேலை காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூர் மாநகராட்சி நிர் வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடி நீர் வழங்கல் துறை சார்பாக அம்ருத் திட்டத் தின் மூலம் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி கள் நடைபெற இருக்கிறது. எனவே திருப் பூர் மாநகரம் பழைய பேருந்து நிலையம் ரவுன்டானாவில் இருந்து தெற்கு காவல் நிலையம் வரை வரும் 11.05.2024 ஆம் தேதி சனிக்கிழமை இரவு முதல் மூன்று தினங்க ளுக்கு 14.05.2024 செவ்வாய்க்கிழமை வரை தாராபுரம் சாலை உஷா தியேட்டர் வழியாக பழைய பேருந்து நிலையம் வரும் அனைத்து வாகனங்களும் மாற்று பாதையில் செல்ல வேண்டும். காங்கேயம் ரோடு சி டி சி கார்னர், ராஜிவ் நகர், வளம் பாலம், எம்.ஜி.பி. ஷோ ரூம் வழி யாகவும், காங்கேயம் சாலையில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரும் அனைத்து வாகனங்களும் மாற்று பாதையாக ராஜீவ் நகர், வளம் பாலம், எம் ஜி பி ஷோரூம் வழி யாக செல்ல வேண்டும் என்று திருப்பூர் மாநக ராட்சி ஆணையர் பவன்குமார் ஜி.கிரியப்பன வர் மற்றும் திருப்பூர் மாநகர காவல் ஆணை யர் பிரவீன்குமார் அபினபு ஆகியோர் தெரி வித்துள்ளனர்.
கொப்பரைக்கு ரூ.140 விலை நிர்ணயம் செய்ய வேண்டும்
உடுமலை, மே. 10- கொப்பரைத் தேங்காய் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.140 என நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு தென்னை விவ சாய சங்கம் கோரிக்கை விடுத்துள் ளது. தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாவட்டக்குழுக்கூட்டம் வியாழனன்று உடுமலையில் தலைவர் சு.பரமசிவம் தலைமையில் நடைபெற் றது. இதில், மாநிலத் தலைவர் எஸ்.ஆர். மதுசூதனன், மாநிலச் செயலாளர் விஜய முருகன், மாவட்டச் செயலாளர் அருண் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், திருப்பூர் மாவட்டத்தில் ஏற் பட்டுள்ள கடும் வறட்சியினால் காய்ந்து போன தென்னைமரங்களுக்கு குறைந்த பட்சம் மரம் ஒன்றிற்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். இதற்காக தோட்டக்கலைத்துறை மூலம் விரைவில் கணக்கெடுப்பு நடத்தி மாவட்ட ஆட்சியர் மூலம் அர சுக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஒன் றிய அரசின் நாபெட் நிறுவனம் ,கொப்ப ரைத் தேங்காய் விலையை ஒரு கிலோ ரூ. 140 என நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும் தற்பொழுது ஒரு ஏக்கருக்கு -290 கிலோ மட்டுமே அதுவும் ஒரு ஆண் டிற்கு- ஒருமுறை மட்டுமே கொள்மு தல் செய்யப்படுகிறது. எனவே 2014 - ஆண்டு வரை நாபெட் நிறுவனம் கொள் முதல் செய்தது போல ஒரு ஏக்கருக்கு - ஒரு ஆண்டிற்கு 900 கிலோ வருடத் திற்கு 4 - முறை கொள்முதல் செய்ய வேண்டும். தற்பொழுது தென்னைம ரங்களைக் கடுமையாகத் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தி வரும் நோய்க ளைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற் றும் தென்னை வளர்ச்சி வாரியம் போன் றவை உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.
மணல் கொள்ளை: 2 பேர் கைது
மணல் கொள்ளை: 2 பேர் கைது தருமபுரி, மே 10- ஏரியூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள கோட்டை யூர் பகுதியில் இரவு நேரங்களில் மணல் கடத்தப்படுவதாக ஏரி யூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பே ரில் காவல் ஆய்வாளர் யுவராஜ், காவலர்கள் அடங்கிய குழுக் வினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது கோட்டை யூர் பரிசல் துறை அருகே பொக்லைன் இயந்திரத்தின் உத வியுடன் டிராக்டரில் மண் எடுத்துக் கொண்டிருப்பது தெரி யவந்தது. இதனையடுத்து, அனுமதியின்றி மண் அள்ளிய ஒட்டனூர் பகுதியைச் சோ்ந்த தமிழரசன் (48), செல்வ ராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், மணல் அள்ள பயன்படுத்திய பொக்லைன் இயந்தி ரம், டிராக்டரையும் பறிமுதல் செய்து, வழக்குப்பதிந்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிரெடிட் கார்டில் ஒரு லட்சம் மோசடி: பனியன் தொழிலாளி தற்கொலை
திருப்பூர், மே 10- திருப்பூர் பனியன் தொழிலாளி யின் கிரெடிட் கார்டில் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல்லை (ஓடிபி) தொலைபேசியில், வங்கி ஊழியர் போல் பேசி ரூபாய் ஒரு லட்சம் மோசடி செய்யப்பட்டுள் ளது. இதையடுத்து மன உளைச்சல் அடைந்த அந்த தொழிலாளி தற் கொலை செய்து கொண்டார். திருப்பூர் மாநகராட்சி, நல்லூர் 2 ஆவது வீதியை சேர்ந்தவர் பிர காஷ் (36). இவர் சிட்கோ பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் டைல ராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி உமாமகேஷ்வரி. பிரகா ஷின் தாய் மற்றும் சகோதரர் உடன் வசித்து வந்தார். இவர் பெற்ற கிரெ டிட் கார்டை வங்கியில் ஒப்படைக்க எண்ணி இருந்தார். அப்பொழுது வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பெண் ஒருவர் இவரைத் தொடர்பு கொண்டார். இதனை அடுத்து அந்த அழைப்பில் பேசிய பெண் உங்க ளுக்கு ஒரு ஓடிபி வரும் அதனை தெரிவித்தால் உடனடியாக கிரெ டிட் கார்டு (டி ஆக்டிவேட்) ரத்து செய்யப்படும் என தெரிவித்துள் ளார். இதனை நம்பிய பிரகாஷ் தனக்கு வந்த ஓடிபி என்னை அவ ரிடம் தெரிவித்துள்ளார். இதனைய டுத்து சிறிது நேரத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வாங்கப்பட்டதாக பிர காஷ் தொலைபேசிக்கு குறுந்தக வல் கிடைத்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரகாஷ் நடந்த விபரத்தை வங்கியில் தெரிவித்துள் ளார். ஆனால் பணம் முறையாக அனுப்பப்பட்டுள்ளது. எனவே, பணத்தை திரும்ப செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை யடுத்து நண்பர்கள் உதவியுடன் சைபர் கிரைம் போலீஸ் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என பல இடங்களில் பிரகாஷ் புகார் அளித்துள்ளார். ஆனால், இதுவ ரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேசமயம் வங்கி தரப்பில் இருந்து பணத்தை திரும்ப செலுத்துமாறு தொடர்ந்து வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அச்சத்தில் இருந்த பிரகாஷ், தனது மனைவி உமா மகேஸ்வரி தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், வெள்ளிக் கிழமை வேலைக்கு செல்லாமல் தென்னை மரத்திற்கு வைக்கப் படும் பூச்சி மாத்திரையை உட் கொண்டு உயிரிழந்தார். இதனை யடுத்து அவரது நிலையை கண்ட தாய் மற்றும் சகோதரர் சதீஷ் இருவ ரும் திருப்பூர் அரசு மருத்துவம னைக்கு பிரகாஷை கொண்டு வந்த னர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித் துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள நல்லூர் போலீ சார் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
தொழிலாளி கொலை: 4 பேர் கைது
நாமக்கல், மே 10- குமாரபாளையத்தில் கூலித்தொழிலாளி கொலை செய் யப்பட்ட வழக்கில், அவரது உறவினர் உட்பட 4 பேரை காவல் துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை அடுத்த பூலக் காட்டைச் சேர்ந்தவர் ரவி (59). கூலித் தொழிலாளியான இவ ரின் சடலம் காவிரியாற்றில் கடந்த புதனன்று மீட்கப்பட்டது. இதுகுறித்து குமாரபாளையம் காவல் துறையினர் வழக் குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், மது அருந்துவதற்கு தனது மருமகனான குமாரபாளை யம், காந்தி நகரைச் சேர்ந்த பூபதி (33), அதேபகுதியைச் சேர்ந்த அவரது நண்பர்களான விக்னேஷ் (31), மாரியப்பன் (30), சின்னப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் (45) ஆகியோருடன் காவிரியாற்றுக்கு செவ்வாயன்று இரவு ரவி சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் பூபதி, தனது நண்பர்களுடன் சேர்ந்து ரவியை கொலை செய் தது தெரியவந்தது. இதையடுத்து, பூபதி உள்ளிட்ட நால் வரையும் காவல் துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.