districts

புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த முயற்சி பெரியார் பல்கலை-க்கு இந்திய மாணவர் சங்கம் கண்டனம்

சேலம், பிப் 03- ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை சேலம் பெரியார்  பல்கலை கழகம் மறைமுகமாக அமல்படுத்திடும் முயற்சியை இந்திய மாணவர் சங்கம் கண்டனம்  தெரிவித்தது. இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் சேலம் மாவட்டச் செய லாளர் சே.பவித்ரன் மற்றும் மாவட் டத் தலைவர் பி.அருண்குமார் ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்திருப்பதாவது, பல் கலைக்கழகத்தில் முனைவர் பட் டம் பெறுவதற்கான அடிப்படை கல் வித் தகுதி என தமிழ்நாட்டில் இது வரையில் பத்தாம் வகுப்பு, பன்னி ரண்டாம் வகுப்பு, இளங்கலை மற் றும் முதுகலை என்ற தகுதி நடை முறையில் இருக்கிறது.   இந்நிலையில், ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இள நிலை பட்டப்படிப்பு 4 ஆண்டுகள்  என்று முடிவு செய்யப்பட்டுள்ள தால் சேலம் பெரியார் பல்கலைக் கழகம் சமீபத்தில் வெளியிட்ட முனைவர் பட்ட படிப்பிற்கான கல்வித் தகுதியில் புதிய கல்விக் கொள்கை 2020 அடிப்படையில் பத் தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் நான்கு ஆண்டு இளங்கலை பட்டம் என்று புதிய தாக மாற்றப்பட்டு அறிவிப்பு வெளி யாகி உள்ளது. இது ஒன்றிய அரசின் கல்வி கொள்கையை மறைமுகமாக அறி முகப்படுத்துவதற்கான முயற்சியா கும். தமிழகத்தில் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு அனு மதி அளிக்கப்படாமலும், புதிய  கல்விக் கொள்கையை தீவிரமாக  எதிர்த்து வரும் நிலையில் பெரியார்  பல்கலை கழக நிர்வாகம் மட்டும் யூ.ஜி.சி யின் அறிவிப்பை சுட்டிக் காட்டி முனைவர் பட்டத்திற்கான கல்வித் தகுதியை நிர்ணயம் செய்து  அறிவிப்பு வெளியிட்டு இருக்கி றது.  இந்த அறிவிப்பை‌ உடனடியாக  ரத்து செய்து அரசின் கொள்கை முடி வுக்கு எதிராக செயல்படும் துணை  வேந்தர், ஆராய்ச்சி மற்றும்  வளர்ச்சி பிரிவு ஒருங்கிணைப்பா ளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும். மேலும், கல்வியில் பல் வேறு குழப்பங்களை உருவாக்கும் பெரியார் பல்கலைக்கழக அறி விப்பு ஆணையை திரும்பப் பெற்று  பழையபடியே அறிவிப்பு வெளி யிட வேண்டும் என அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.