சேலம், ஏப்.25- சேலத்தில் நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக் கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு “என் கல்லூரி கனவு” நிகழ்ச்சி சேலம் அரசு மோகன் குமாரமங் கலம் மருத்துவக்கல்லூரி கூட்டரங்கத்தில் நடைபெற்றது. உயர்கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சிக்கு ஆதிதிராவி டர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் லட்சுமி பிரியா தலைமை வகித்தார். உயர்கல்வி வழிகாட்டுதல் மைய நிர்வாகி இளையராஜா கருத்துரையாற்றினார். மேலும், மருத்துவத்துறையைச் சேர்ந்த கல்வியை குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் தலைவரும், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் கல்லூரி இணை பேராசிரிய ருமான திருநாவுக்கரசு கருத்துரையாற்றினார். இந்நிகழ்ச்சி யில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, பழங்குடியி னர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை, தமிழ்நாடு தொடக்ககல்வி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் கணேசன் மற்றும் பள்ளி விடுதி மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.