districts

img

கோழிப்பண்ணையால் சுகாதார சீர்கேடு: பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

தருமபுரி, பிப்.3- நல்லம்பள்ளி அருகே சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் கோழிப்பண்ணையை மூட வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடு பட்டனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தேவர் ஊத்து பள்ளம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கோழிப் பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த கோழிப்பண்ணை கிராமத்தை ஒட்டியே உள்ளது. இதனால் சிறுவர் முதல்  பெரியவர்கள் வரை மூச்சுத்திணறல், காய்ச்சல் உள்ளிட்ட  பல்வேறு நோய்களால் அவதியுறுகின்றனர். மேலும், கால் நடைகள், விவசாய பயிர்களும் பாதிப்படைகின்றன. எனவே, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் இந்த கோழிப் பண்ணையை உடனடியாக மூட வேண்டும் என வலியு றுத்தி அப்பகுதி பொதுமக்கள் கோழிப்பண்யை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதியமான்கோட்டை காவல் துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றனர்.