districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மலைகாய்கறிகள் விலை உயர்வு  நீலகிரி விவசாயிகள் மகிழ்ச்சி

உதகை, ஜன.9- மலைகாய்கறிகளின் விலை உயர்வால் நீலகிரி மாவட்ட விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பெய்த மழையால் அனைத்து பகுதிகளிலும் காய்கறிகள் மகசூல்  அதிகரித்துள்ளது. குறிப்பாக, உதகை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட், பீன்ஸ் மற்றும் முட்டைகோஸ் போன்ற காய்கறிகளின் மகசூல் அதி கமாக உள்ளது. அதேபோல், மலை காய்கறிகளின் விலை யும் உயர்ந்து கொண்டே செல்வதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம் வரை காய்கறி களின் விலை குறைந்து காணப்பட்ட போதிலும், கடந்த மாதம் துவக்கம் முதல் காய்கறிகளின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது நீலகிரியில் விளையும் கேரட் கிலோ ஒன்றுக்கு ரூ.70 முதல் ரூ.80 வரையிலும், பீட்ரூட் ரூ.50 முதல் ரூ.70 வரையிலும், முட்டைகோஸ் ரூ.40 வரையி லும், பீன்ஸ் ரூ.40 வரையிலும், முள்ளங்கி ரூ.30 வரையிலும், உருளைக்கிழங்கு ரூ.40 முதல் ரூ.50 வரையிலும், பட்டாணி  ரூ.100 வரையிலும், காலிபிளவர் ரூ.40, உதகை அவரை  ரூ.100 முதல் ரூ.120 வரையிலும் விற்பனை செய்யப்படுகி றது. சாதாரணமாக முட்டைகோஸ் கிலோ ஒன்றுக்கு ரூ.10  முதல் ரூ.15 கிடைத்தாலே லாபம் என கூறும் விவசாயிகள் மத்தியில் தற்போது கிலோ ஒன்றுக்கு ரூ.40 வரை கிடைத்து வருவது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே போல், பீட்ரூட்டும் சிலர் மட்டுமே பயிரிடுகின்றனர். அதுவும் மாவட்டத்தில் மற்ற பயிர்களை காட்டிலும் இது குறைந்த ளவே பயிரிடப்படுகிறது. இருந்த போதிலும், இந்த முறை  கிலோ ஒன்றுக்கு ரூ.50 முதல் ரூ.70 வரை தரத்திற்கு ஏற்றவாறு விலை கிடைப்பதால் பீட்ரூட் பயிரிட்ட விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பென்னாகரம்: உணவு பாதுகாப்புக்குழு உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி

பென்னாகரம், ஜன.9- உணவு பாதுகாப்புக்குழு உறுப்பினர்களுக்கான விழிப் புணர்வு பயிற்சி ஒகேனக்கல்லில் நடைபெற்றுது. தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம், பென்னாகரம் வட்டார நுகர்வோர் பாது காப்பு மையம் இணைந்து மண்டல அளவிலான உணவு பாது காப்புக்குழு உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி  ஒகேனக்கல் சி.எம் ஹோட்டல் கூட்டரங்கில் சனியன்று நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் பொதுச்செயலாளர் ஆர்.ரமேஷ் தலைமை வகித்தார். தருமபுரி மாவட்ட நுகர் வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் கே.எம்.அண்ணாமலை,  தமிழ்நாடு நுகர்வோர் மையத்தின் செயலாளர் ஏ.ஜி.ஜாய்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக அளவில் அயோ டின் பற்றாக்குறை குறைபாடுகள் குறித்து தமிழ்நாடு நுகர் வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் ஆய்வுகள் குறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ.சிவரஞ்சனி கருத்துரை வழங்கினார்.  இக்கூட்டத்தில், தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ஏ.பானு சுஜாதா, பென்னாகரம் நுகர்வோர் பாதுகாப்புச் சங்க செயலாளர் ஆர்.சம்பத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

ஈரோடு, ஜன.9- ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள் ளாட்சி தேர்தலுக்கான வாக்குபதிவு இயந்தி ரங்கள் வாக்குசாவடிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி அரசியல் கட்சியினர் முன்னி லையில் நடைபெற்றது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மேற் கொண்டுள்ளது. இந்நிலையில், மாநில தேர் தல் ஆணையத்தின் இணையதளம் மூலம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற உள் ளாட்சி வாக்குசாவடிகளுக்கு சீரற்ற முறை யில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் கள் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் நடைபெற்றது. அங் கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதி கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலு வலரும், ஆட்சியருமான கிருஷ்ணனுண்ணி பணிகளை தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 4  நகராட்சிகள் மற்றும் 42 பேரூராட்சிகளில் என மொத்தம் 1,251 வாக்குச்சாவடிகளில் வாக் குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையடுத்து  கட்டுப்பாட்டு கருவிகள் 1251, வாக்குப்பதிவு  இயந்திரங்கள் 1251 ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

உதகை: நட்சத்திர விடுதியில்  7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

உதகை, ஜன.9- நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு  மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற் கொண்டு வருகிறது. சுற்றுலாத் தலங்களுக்கு வரும் பொது மக்கள் கட்டாயமாக இரண்டு தடுப்பூசி செலுத்திய சான்றி தழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், பொதுமக்கள் மார்க்கெட் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டமாக இருப்பது தவிர்க்க வேண்டுமென நகராட்சி மற்றும் பேரூராட்சி வாகனங்களில் ஒலிப்பெருக்கி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், உதகையில் உள்ள நட்சத்திர விடுதியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, சுகாதாரத் துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அதில், விடுதி ஊழியர்கள் ஏழு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட் டது. இதையடுத்து நட்சத்திர விடுதியை மூட சுகாதாரத்துறை யினர் உத்தரவிட்டனர்.

கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தல்

தருமபுரி, ஜன.9- அரூர் ஊராட்சி ஒன்றி யம், எச்.ஈச்சம்பாடியில் வாரந் தோறும் செவ்வாய்க்கிழ மையில் வாரச்சந்தை கூடும்.  இந்த சந்தைக்கு 30க்கும்  மேற்பட்ட கிராம மக்கள், விவ சாயிகள், வியாபாரிகள் வந் துச் செல்கின்றனர். இந்நி லையில், இச்சந்தையில் கழிப் பிட வசதி இல்லாததால், இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, எச்.ஈச்சம்பாடி வாரச்சந்தை வளாகத்தில் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சேலம், ஜன.9- பொங்கல் பண்டிகையை முன் னிட்டு சேலம் கோட்டம் சார்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழக அதி காரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சென்னை, விழுப்புரம், சேலம், கும்பகோணம், திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி என எட்டு கோட்டங்களாக செயல் பட்டு வருகிறது. இந்த கோட்டங் களில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் பல்வேறு வழித்தடங்க ளில் இயக்கப்பட்டு வருகிறது. வழக் கமாக ஒவ்வொரு ஆண்டும் தீபா வளி, பொங்கல், நவராத்திரி விழாக் களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக் கப்படுவது வழக்கம். அதன்படி, நடப் பாண்டு பொங்கல் பண்டிகை வரும் 14, 15, 16 ஆம் தேதிகளில் கொண்டா டப்படுகிறது. அடுத்தடுத்து நாட் கள் விடுமுறை என்பதால் வெளி யூர்களில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட் டுள்ளனர். அவர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு  பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்ட அதிகாரிகள் கூறுகையில், சேலம் கோட்டம் சேலம், நாமக்கல், தரும புரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங் களை உள்ளடக்கியது. இம்மாவட் டங்களில் ஆயிரத்து 900க்கும் மேற் பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டி கைகளின் போது சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருப்பூர், வேலூர், ஈரோடு, கரூர், பெங்களூர் உள்பட பல ஊர்க ளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப் படும். வழக்கமாக தீபாவளி, பொங் கல் பண்டிகையின்போது சேலம் கோட்டம் சார்பில் 300 சிறப்பு பேருந் துகள் இயக்கப்படும். நடப்பாண்டு  ஒமைக்ரான் பரவல் காரணமாக  இன்று (ஜன.9 ஆம் தேதி) முழு ஊர டங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (ஜன.10 ஆம் தேதி) ஊர டங்கு குறித்த புது அறிவிப்புகள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அந்த அறிவிப்பை பொறுத்து பொங் கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப் படும். மேலும், 200 சிறப்பு பேருந்து கள் வரை இயக்க வாய்ப்புள்ளது, என்றனர்.

மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

திருப்பூர், ஜன.9- உடுமலை காந்தி கலா நிலையம் என்ற அரசு உதவி பெரும் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டார்.  உடுமலை தாலுகா, கரட்டுமடம் பகுதியில் உள்ள காந்தி  கலா நிலையம் என்ற அரசு உதவி பெரும் பள்ளி செயல் பட்டு வருகிறது. இப்பள்ளியில் தீபாலபட்டி பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் (37), என்பவர் தமிழ் ஆசிரியராக பணி புரித்து வருகிறார். இந்நிலையில் அசோக்குமார், பள்ளி  மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, கடந்த  ஜன.4 ஆம் தேதி திருப்பூர் சைல்ட் லைனுக்கு (1098)  புகார் வந்தது. அதில், பள்ளி மாணவிகளுக்கு தனிப்பட்ட  முறையில் வாட்ஸ் ஆப் செயலில் பாலியல் எண்ணங்களை தூண்டும் வகையில் குறுச்செய்திகளை அந்த ஆசிரியர் அனுப்பி மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்து வருவ தாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து சைல்டு லைனுக்கு  கிடைத்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, கடந்த ஜன.5 ஆம் தேதியன்று கள ஆய்வில் ஆசிரியர் அசோக் குமாரின் குற்றம் கண்டுபிடிக்கபட்டது. இதன்பின், பாதிக் கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் யாரும் புகார் தர முன்வ ராத காரணத்தால் அசோக்குமார் தொலைபேசியில் இருந்த ஆவணங்கள் படியும், சைல்டு லைனுக்கு கிடைத்த தகவ லின் பேரிலும், அவரை போக்சோ சட்டத்தின் கீழ் உடுமலை  மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர்: மருத்துவ பணிகள் இணை இயக்குனருக்கு கொரோனா

திருப்பூர், ஜன.9- திருப்பூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி கள் இணை இயக்குநராக பொ.பிரேமலதா (55) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவருக்கு கடந்த சில  நாட்களாக சளி மற்றும் இருமல் இருந்துள்ளது. இதைய டுத்து பிரேமலதா கொரோனா பரிசோதனை மேற்கொண்ட தில், அவருக்கு தொற்று உறுதியானது. இதைத்தொ டர்ந்து அவருடன் அலுவலகத் தொடர்பில் இருந்த பல ருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அரசு பேருந்து நடத்துநர் மீது தாக்குதல்

தாராபுரம், ஜன.9-  தாராபுரத்தில் அரசு பேருந்தை மறித்து நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய வாலிபர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகின்ற னர். தாராபுரம் அடுத்துள்ள தாசர் பட்டி, கெத்தல்ரேவ் கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (41). அரசு போக்குவரத்து கழக தாராபுரம் கிளையில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலை யில், சனியன்று மதியம் திருப்பூ ரில் இருந்து தேனி செல்லும் பேருந் தில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப் போது தாராபுரம் அமராவதி ரவுண் டானா அருகே பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருக் கையில், ஒரு வாலிபர் பேருந்தை முந்திச்சென்று பேருந்தை மறித்துள் ளார். இதன்பின், பேருந்துக்குள் ஏறி  ஓட்டுநர் ரத்தினசாமியிடம் ஏன் தொடர்ந்து ஹாரன் அடித்து வருகி றாய் எனக்கூறி தகராறில் ஈடுபட்டுள் ளார். அதைத்தொடர்ந்து நடத்துநர் கோபாலகிருஷ்ணன் அந்த வாலி பரை சமாதானப்படுத்த முயன்ற போது ஆத்திரமடைந்த அந்த நபர், அவரை கடுமையாக தாக்கிவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து காயமடைந்த நடத்து நர் கோபாலகிருஷ்ணன் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதன்பின், அவர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் தாராப ரம் காவல் உதவி ஆய்வாளர் விஜய குமார் விசாரணை மேற்கொண் டார். இதில், நடத்துனர் மீது தாக்கு தல் நடத்தி வாலிபர் தாராபுரம் சகுனி பாளையம் சாலையை சேர்ந்த நிர் மல்குமார் (28), என்பது தெரிய வந்தது. இதையடுத்து பல்வேறு பிரி வுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த  காவல் துறையினர் நிர்மல்குமாரை தேடி வருகின்றனர். அரசு பேருந்து  நடத்துநர் தாக்கப்பட்ட சம்பவத்தை  அறிந்த சக ஊழியர்கள் தாராபுரம் காவல் நிலையம் முன்பு குவிந்த தால் பரபரப்பு ஏற்பட்டது.

முளைப்பு திறன் இல்லாத விதை விற்பனையை தடுக்க கோரிக்கை

உடுமலை, ஜன.9-  முளைப்பு திறன் இல்லாத விதைகளை விற்பனை செய் பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதி விவசாயிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.  உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் கடந்த மாதம் பெய்த பருவமழையால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து உள்ளது. இதனால் இப்பகுதியில் விவசாயிகள் சிறு தானி யங்கள் மற்றும் நிலக்கடலைகளை அதிகமாக பயிரிட்டுள்ள னர். ஆனால், விளை நிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட  விதைகள் முளைக்காமல் உள்ளது. இதனால் அதிர்ச்சிய டைந்த விவசாயிகள் விதை வாங்கிய கடைகளில் முறையிட் டனர். ஆனால், விவசாயிகளுக்கு முறையான பதில் கிடைக் காததால் பாதி முளைத்த செடிகளை அழிக்கும் வேலை யில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி  விவசாயிகள் கூறுகையில், பருவமழை நல்ல முறையில் பெய்த காரணத்தில் தனியாரிடம் நிலக்கடலை விதைகள் வாங்கி நடவு செய்து இரண்டு வாரங்கள் ஆகியும் பாதிக்கும்  மேற்பட்ட விதைகள் முளைக்காமல் உள்ளது. இதற்கான காரணத்தை கேட்டால் நாங்கள் உங்கள் நிலத்திற்கு வருகி றோம் என்று சொல்கிறார்கள். ஆனால், தற்பொழுது வரை  யாரும் வரவில்லை. பாதி முளைத்த நிலத்தில் எப்படி விவசா யம் செய்வது என்று வேதனை தெரிவித்துள்ளனர்.  எனவே, முறையான விதை சான்று இல்லாமல் விதை களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது வேளாண் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க  வேண்டும் என அப்பகுதி விவசாயிக வலியுறுத்தி உள்ள னர்.

மது விற்றவர் கைது

தாராபுரம், ஜன.9-  தாராபுரத்தில் சட்டவிரோ தமாக மது விற்றவர் கைது செய்யப்பட்டார். தாராபுரம் ரெட்டாலவ லசு பகுதியில் சட்டவிரோ தமாக மதுவிற்பனை நடை பெற்று வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தக வல் கிடைத்தது. அதன்பே ரில், தாராபுரம் காவல் உதவி ஆய்வாளர் கருப்புச்சாமி தலைமையிலான காவலர் கள் அப்பதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப் போது சிவகங்கை, மாவட் டத்தை சேர்ந்த அருண்ராஜ் (34)என்பவர் சட்டவிரோத மாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந் தது. இதையடுத்து அவரை  கைது செய்த காவல் துறை யினர், 42 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.