districts

img

குட்கா விற்பனை: கடைகளுக்கு ‘சீல்’

சேலம், ஜன.6- தடை செய்யப்பட்ட குக்கா பொருட்களை விற்பனை செய்த ஆத்தூர் நகர்மன்ற உறுப்பினரின் மளிகை கடை உட் பட 2 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கள் சீல் வைத்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி, 30 ஆவது வார்டு  கவுன்சிலராக சந்திரா என்பவர் உள்ளார். இவர் அதேப்பகுதி யில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், மளிகை  கடையில் கடந்த நவ.26 ஆம் தேதியன்று தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவ தாக உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடையில் ஆய்வு செய்த அதிகாரிகள், ரூ.5  ஆயிரம் அபராதம் விதித்து, கடையிலிருந்த குட்கா பொருட் களை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், தொடர்ந்து விற் பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரி கண் ணன், நகர்மன்ற உறுப்பினர் சந்திராவின் கடையை ஆய்வு  செய்தபோது குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு. அந்த கடைக்கு அவர் சீல் வைக்க முயன் றார். அப்போது, அவரது உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் அவரை சூழ்ந்து கொண்டு அதிகாரியை சிறை பிடித்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆத்தூர் நகர காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார், அரசு அதிகாரிகளை மீட்டு, அரசால் தடை செய்யப்பட்ட பொருட் களை விற்பனைக்கு வைத்திருந்த கடைக்கு சீல் வைத்தனர். இதேபோல், முல்லைவாடி பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரது கடைக்கும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர்.