districts

img

மாமேதை கார்ல் மார்க்ஸ் பிறந்த நாள் கொண்டாட்டம்

சேலம், மே 5- உலக மாமேதை கார்ல் மார்க்ஸின் 204 ஆவது பிறந்தநாள் வியாழனன்று கொண் டாடப்பட்டது. மனித குலத்தின் விடுதலைக்காக உழைத் திட்ட, உலக தத்துவ மாமேதை கார்ல் மார்க்ஸின் 204 ஆவது பிறந்த நாள் உலகம் முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடப்பட் டது. அதன்ஒருபகுதியாக சேலம் சிறை தியா கிகள் நினைவிடத்தில் உள்ள கார்ல் மார்க்ஸ் திருவுருவ சிலைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து கட்சியின் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா  தலைமையில் நடைபெற்ற கொடியேற்று  விழாவில், மாநில செயற்குழு உறுப்பினர் பி.செல்வசிங் செங்கொடியை ஏற்றி வைத்து, சிறப்புரையாற்றினார்.  இந்நிகழ்ச்சியில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.குணசேகரன், டி.உதய குமார், ஏ.ராமமூர்த்தி, ஐ.ஞானசௌந்தரி, மேற்கு மாநகர செயலாளர் எம்.கனகராஜ், வடக்கு மாநகர செயலாளர் என்.பிரவீன் குமார், மேட்டூர் - கொளத்தூர் ஒன்றிய செய லாளர் எஸ்.வசந்தி, சேலம் தாலுகா செயலா ளர் கே.எஸ்.பழனிசாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.சேதுமாதவன், பி.பால கிருஷ்ணன், மார்க்சின் சிலையை வடிவ மைத்த ஏ.முகமதுஅலி உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்

கோவை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  கோவை தெற்கு நகரக்குழு சார்பில் குனிய முத்தூரில் மாமேதை மார்க்ஸ் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதில், கோவை மாந கராட்சி துணை மேயர் ரா.வெற்றிச்செல் வன் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் கலந்து கொண்டு மார்க்ஸ் குறித்து புகழு ரையாற்றினர். கார்ல் மார்க்சின் பிறந்தநாளையொட்டி சின்னியம்பாளையம் தியாகிகள் மேடை யில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ் வில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் சி. பத்மநாபன், சூலூர் தாலுகா செயலாளர் சந் திரன், வாலிபர் சங்கத்தின் தாலுகா செயலா ளர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியம், ஜடல் நாயுடு வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் 8 ஆவது வார்டு கவுன் சிலர் சிவராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் கிளை செயலாளர் கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்திய மாணவர் சங்கத்தின் கோவை  மாவட்டக்குழு சார்பாக புரட்சியாளர் மார்க்ஸ் பிறந்தநாள் கோவை அரசு கலைக் கல்லூரி வாயில் முன்பு கொண்டாடப்பட் டது. இந்நிகழ்வில், மாணவர்களுக்கு இனிப் புகள் வழங்கியும், பொதுவுடமை கொள்கை களை திக்கெட்டும் பரப்புவோம் என்கிற உறுதி மொழியும் எடுக்கப்பட்டது. இதில், மாண வர் சங்க மாவட்ட தலைவர் அசாருதீன், மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜா, அரசு  கலைக்கல்லூரி நிர்வாகி குமரன் உட்பட  திரளான மாணவர்கள் கலந்து கொண்ட னர்.