districts

img

அரசு ஊழியர் சங்க அமைப்பு தின விழா

பென்னாகரம், மே 7- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அமைப்பு  தின விழா வெள்ளியன்று கொண்டாடப்பட் டது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 39 ஆம் ஆண்டு அமைப்பு தின கொடியேற்று விழா பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலு வலகம், வேளாண்மை துறை அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், சார்நிலை கரூ வூலம் மற்றும் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. பென்னாகரம் வட்டக் கிளையின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச் சிக்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலா ளர் ஏ.சேகர், மாவட்ட துணை தலைவர் சி. காவேரி ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், அகில இந்திய அரசு ஊழியர் சம்மே ளன கொடியை வட்டக்கிளை செயலாளர் கி. வேலவனும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க  கொடியை வட்டக்கிளை தலைவர் திம்மராய னும் ஏற்றி வைத்தனர். இந்நிகழ்வில் திர ளான அரசு ஊழியர்கள் கலந்து கொண்ட னர்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம், திருப்பூர் வடக்கு நெடுஞ்சாலை துறை  அலுவலகம், திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தொழிற்பயிற்சி நிறுவனம் மற் றும் ஊத்துக்குளி உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்  கொடியேற்றி வைத்து அரசு ஊழியர்கள் வாழ்த்து முழக்கம் எழுப்பினர். இதில் தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராணி, மாவட்ட இணை செயலாளர் ராமன், மாவட்ட தணிக்கையாளர் பசுபதி மற்றும்  திருப்பூர் தெற்கு வட்டக் கிளை நிர்வாகிகள், திருப்பூர் தொழிற்பயிற்சி நிலையத்தினர் கலந்து கொண்டனர்.