நாமக்கல், அக்.15- விசைத்தறி தொழிலாளர்களுக்கு 20 சத விகித போனஸ் வழங்குமாறு சிஐடியு விசைத் தறி தொழிலாளர் சங்கம் தீர்மானம் நிறை வேற்றி உள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், காவேரி ஆர்.எஸ் சிஐடியு அலுவலகத்தில், நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழி லாளர் சங்கத்தின் சிறப்புப் பேரவைக் கூட்டம் சனியன்று நடைபெற்றது. இந்த பேரவைக் கூட்டத்திற்கு விசைத்தறி தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் அசன் தலைமை ஏற்றார். ஒன்றிய செயலாளர் எஸ். முத்துக்குமார் வரவேற்றார். இக்கூட்டத்தில் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், குமாரபாளையம், வெப்படை, திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான விசைத்தறி தொழிலாளர்கள் வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். இந்த விசைத்தறி தொழிலாளர்களுக்கு முறையான கூலி உயர்வு, 8 மணி நேர வேலை, இஎஸ்ஐ, பி எஃப், பண்டிகை காலத்தில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டுமென சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் போராடி வரு கின்றனர். இதன் ஒரு பகுதியாக, பள்ளிப்பாளையம் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை கூலி உயர்வு, போனஸ் உயர்வு சம் பந்தமாக விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்திற்கும், தொழிற்சங்கத்திற்கும் இடையே பேசி தீர்வு கண்டு புதிய ஒப்பந்தம் அமலாக வேண்டும். கடந்தாண்டு, ஒன்பதரை சதவிகித போனஸ் வழங்குவது என ஒப்பந்தம் காலா வதி ஆகிவிட்டது. தற்போது 2022, 2023 ஆம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் 20 சதவிகிதம் வழங்க வேண்டும். இதை வலியு றுத்தி தொடர் இயக்கங்களை நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. சிஐடியு மாவட்டச் செயலாளர் என்.வேலுச்சாமி, விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.அசோகன், மாவட்டத் தலைவர் கே.மோகன், விசைத் தறி தொழிலாளர் சங்க ஒன்றியப் பொரு ளாளர் முருகேசன் மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் ஏராளமானோர் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.