districts

img

ரேசன் பொருட்களை முறையாக வழங்கிடுக

நாமக்கல், ஆக.20- அனைத்து ரேசன் அட்டை தாரர்களுக்கும், ரேசன் பொருட்களை முறையாக வழங்கிட வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஜெனரல் ஒர்க்கஸ் யூனியன் மாவட்ட மகாசபை வலியு றுத்தியுள்ளது.  நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ். தொழிற்சங்க அலுவலகத் தில், நாமக்கல் மாவட்ட ஜெனரல் ஒர்க்கஸ் யூனி யன் 33 ஆவது மாவட்ட மகாசபை கூட்டம்  நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வி.சங்கரன்  தலைமை ஏற்றார். சிஐடியு மாவட்டச் செய லாளர் என்.வேலுச்சாமி, மாவட்டத் தலைவர் எம்.அசோகன் ஆகியோர் உரையாற்றினர்.  ஜெனரல் ஒர்க்கஸ் யூனியன் சங்க மாவட்டச் செயலாளர் கே.மோகன், பொருளாளர் சரவ ணன் வேல் அறிக்கைவைத்தனர்.  ரேசன் கடையில் பருப்பு, பாமாயில், முறையாக கிடைக்காததால், ஏழை எளிய மக் கள் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். எனவே இவற்றை மாதந்தோறும் உரிய தேதியில் வழங்கிட வேண்டும். நல வாரியத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்து, பணப்பயன்களை உயர்த்தி வழங்க வேண்டும். காவேரி ஆர்.எஸ் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். காவிரி ஆற்றில் சாயக் கழிவுநீர்  கலப்பதை தடுத்து நிறுத்திட வேண்டும். வசந்தா நகர் மயானத்தை பராமரித்து வசதி கள் செய்து தர வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து சங்கத்தின் தலை வராக வி.சங்கரன், செயலாளராக கே. மோகன், பொருளாளராக சரவணன், துணைத் தலைவராக தாமோதரன், துணைச்செயலாள ராக எம்.எஸ்.மாதவன் உள்ளிட்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. முடிவில், சி. சௌந்தரராஜன் நன்றி கூறினார்.