districts

img

பூண்டு வரத்து அதிகரிப்பால் விலை குறைவு: விவசாயிகள் கவலை

உதகை, மார்ச் 9- நீலகிரி மாவட்டத்தில் பூண்டு வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது. இத னால், விவசாயிகள் கவலை அடைந்துள்ள னர். நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட் உள் ளிட்ட மலை காய்கறிகள் அதிகளவில் சாகு படி செய்யப்படுகின்றன. இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக் கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படு கின்றன. தற்போது உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பூண்டு அறு வடை செய்யும் பணி நடந்து வருகிறது. இவை, விற்பனைக்காக உதகை நகராட்சி மார்க்கெட், மேட்டுப்பாளையம் மண்டிக ளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. கடந்த சில நாட்களாக பூண்டு விளைச்சல் அதிக ரித்துள்ளதால், விலை வீழ்ச்சியடைந்து வரு கிறது. இதனால் பராமரிப்பு செலவு, தொழி லாளர்கள் கூலி கூட கொடுக்க முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பூண்டு முதல் தரம் கிலோவுக்கு ரூ.90 முதல் ரூ.100 வரையும், 2 ஆவது தரம் ரூ.40 முதல் ரூ.50 வரையும் மட்டுமே விற்பனையாகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனையா னது. இதேபோல், ஒரு கிலோ கேரட் ரூ.80  முதல் ரூ.90 வரையும், பீட்ரூட் ரூ.30க்கும்,  உருளைக்கிழங்கு ரூ.50 முதல் ரூ.60 வரை யும், முள்ளங்கி ரூ.15 முதல் ரூ.20 வரையும், முட்டைகோஸ், காலிபிளவர், பீன்ஸ் ரூ.20 முதல் ரூ.30 வரையும் விற்பனையாகி வரு கிறது. வெளியிடங்களில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளி ஒரு கிலோ  ரூ.10 முதல் ரூ.15 வரை, பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் ரூ.30 முதல் ரூ.40 வரை விற் பனை செய்யப்பட்டு வருகின்றன. கேரட், உருளைக்கிழங்குக்கு நல்ல விலை கிடைக் கிறது. மற்ற காய்கறிகளின் விலை குறைந் துள்ளது. மேட்டுப்பாளையம் மண்டிக ளுக்கு வடமாநிலங்களில் இருந்து பூண்டு  விற்பனைக்கு வருவதால், உதகையில் விளையும் பூண்டின் விலை குறைந்துள்ள தாக விவசாயிகள் தெரிவித்தனர்.