districts

குமாரபாளையம் நகராட்சிக்கு ரூ.4 கோடி இழப்பு

நாமக்கல், அக்.2- குப்பை எடுக்கும் ஒப்பந்தத்தை எடுத் துள்ள தனியார் நிறுவனத்தால் நகராட்சிக்கு வருடந்தோறும் ரூ.4 கோடி இழப்பு ஏற்படுவ தாக, குமாரபாளையம் நகர்மன்ற தலைவர் விஜய கண்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சியின் மாதாந்திர சாதாரண கூட்டம், கூட்டரங்கில் நகராட்சி ஆணையாளர் சர வணன் முன்னிலையிலும், நகர்மன்ற தலை வர் விஜய கண்ணன் தலைமையிலும் நடை பெற்றது. இக்கூட்டத்தின் முன்னதாக நகர் மன்ற துணைத்தலைவர் வெங்கடேசன் பேசு கையில், இ-சேவை மையம் கட்டடம் மிகவும்  பழுதடைந்துள்ளதால், அதை மாற்றி  அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண் டார். இதன்பின், அனைத்து நகர்மன்ற உறுப் பினர்களும், குமாரபாளையம் நகராட்சி பகுதியில் தொடர்ந்து குப்பைகள் சேகரித்து, அவற்றை எடுக்காமல் ஆங்காங்கே மூட்டை கட்டி வைத்திருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற் படுகிறது. இதற்கு உடனடியாக நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து, நகர்மன்ற தலைவர் விஜய கண்ணன் பேசுகையில், குமாரபாளை யம் நகராட்சி பகுதிகளில் குப்பைகளை சேக ரித்து தூய்மைப்படுத்துவதற்கு தனியாருக்கு ஒப்பந்தம் விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப் பந்ததாரர்கள் நகராட்சி நிர்வாகத்தை ஏமாற் றும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடு பட்டு வருகின்றனர். நகராட்சி முழுவதும் குப்பைகள் ஆங்காங்கே தேங்கியுள்ளன. இதுகுறித்து தனியார் நிறுவனத்திற்கு பல முறை எச்சரிக்கை விடுத்தும், எவ்வித நடவ டிக்கையும் இல்லை. எனவே, குப்பைகளை  சேகரிக்காமல் விட்டால், அந்த ஒப்பந்த நிறு வனத்திற்கு அபராதம் விதிக்க மண்டல நக ராட்சி ஆணையாளர் உத்தரவிட்டதன் பேரில், தற்பொழுது அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன. மேலும்,. தொடர்ந்து அலட்சியப் போக்கை கடைப்பிடித்தால் ஒப்பந்தம் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  குமாரபாளையம் நகராட்சிக்கு குப்பை எடுப்பதில் தனியாருக்கு ஒப்பந்தம் விடப் பட்டதில், வருடந்தோறும் 4 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இந்த பணம் இருந்தால் நகராட்சி பகுதிகளில் பல்வேறு திட்டப்பணி களை மேற்கொள்ளலாம்.

எனவே, இந்த ஒப் பந்தத்தை ரத்து செய்யலாம் எனவும், விரை வில் நகர்மன்ற உறுப்பினர்கள் ஒப்புதலுடன் முடிவு எடுக்கப்படும், என்றார். கொரோனா போன்ற தொற்று ஏற்பட்டு மனித உயிர்கள் கொத்துக்கொத்தாய் மடிந்த  நேரத்தில், தனியார் நிறுவனங்கள் தாங்கள்  உயிர் பிழைத்தால் போதும் என ஓடியது. லாபம் ஒன்றே குறிக்கோளாக தனியார் நிறுவனங் கள் செயல்படும் என்பது அப்போது அம்பல மானது. அந்நேரத்தில், அரசுத்துறைகளின் ஊழியர்களே களத்தில் நின்று மக்களை காத்தனர். ஆகவே, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளை வலுப்படுத்த வேண்டும். சுகாதாரப்பணிகள், குடிநீர் விநியோகம், மின் விநியோகம், பேருந்து சேவை உள்ளிட்ட வைகளை அரசுத்துறையே நிர்வகிக்க வேண் டும். தனியார் வசமானால் ஊழலுக்கு வழி வகுக்கும் எனவும், உள்ளாட்சி அமைப்பு களே சுகாதாரப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். தனியார் வசம் கொடுக்கக்கூடாது என தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி, சிஐடியு உள்ளிட்ட இயக்கங்கள் வலியுறுத்தி இயக் கங்களை நடத்தி வருகிறது. தற்போது குமார பாளையம் நகராட்சிக்கு குப்பை எடுப்பதில் தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டதில், வரு டந்தோறும் 4 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவ தாக அந்நகராட்சியின் தலைவரே ஒப்புதல் கொடுத்திருப்பது, மார்க்சிஸ்ட் கட்சி முன் வைத்த கோரிக்கையின் நியாயத்தை அப் பகுதி மக்கள் உணரத்துவங்கியுள்ளனர்.