உடுமலை, ஜூலை 31- உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழு நேர கிளை நூலகம் எண் 2 செயல்படுகிறது. இந்நூலகத்திற்கு வாசகர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் நூலக பயன்பாட் டிற்கு தேவையான பொருட்களை பல்வேறு நபர்கள் நன் கொடையாக அளித்து வருகின்றனர். இதன்ஒருபகுதியாக நூலக வாசகர்கள் பயன்பாட்டிற்காக சிந்தாமணியில் பணி புரிந்து பணி நிறைவு பெற்ற சமூக ஆர்வலர் கே.ராமலிங்கம் மற் றும் அவரது நண்பர்கள் இன்ஜினியர் யு.டி வெங்கடேச குமார், ஏ.பழனியப்பன் (பட்டதாரி ஆசிரியர் பணி நிறைவு) கண்ணு சாமி ஆகியோர் ஒத்துழைப்போடு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள மின்விசிறிகள் நன்கொடையாக நூலகர் கணேசனிடம் வழங்கினார். இதனை பெற்றுக்கொண்ட நூலக நிர்வாகிகள் மாதேஸ்வரன் மற்றும் நூலகர்கள் மகேந்திரன், பிரமோத், அஷ் ரப், சித்திகா ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.