திருப்பூர், மே 29- திருப்பூர் ஆண்டிபா ளையம் பகுதியில் ஞாயிற் றுக்கிழமை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் திருப்பூர் நெஞ்சக மருத்துவமனை இணைந்து இலவச நுரையீரல் மற்றும் பொது மருத்துவ பரிசோ தனை முகாமை நடத்தினர். நாச்சம்மாள் காலனி எஸ்.ராஜா மருத்துவமனையில் நடைபெற்ற இந்த முகாமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் கே.கணேசன் துவக்கி வைத்தார். வாலிபர் சங்க மாவட்ட செயலா ளர் மணிகண்டன், வாலிபர் சங்க முன்னாள் நிர்வாகிகள் ஆர். காளியப்பன், ராஜன், தமுஎகச கிளைச் செயலாளர் லெனின் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இம்முகாமில் 50 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.