திருப்பூர், ஆக. 23 - மக்கள் விரோத பாஜகவிற்கு எதிராக இந்தியா கூட்டணி வியூகம் அமைத்திருக்கிறது. இம்முறை பாஜகவின் எதிர்ப்பு வாக்குகளை சிதறாமல் பெருவதற்கான நடவ டிக்கைகளை மேற்கொள்வோம் என அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் தேவராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பார்வர்ட் பிளாக் கட்சியின் திருப்பூர் புறநகர் மாவட்ட செய லாளர் தேனி கே.காளிமுத்துவின் புதுமனை புகுவிழா திருப்பூர் மாஸ்கோ நகரில் புதனன்று நடந் தது. இதில் பங்கேற்ற தேவராஜன் செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தபோது, அகில இந்திய பார்வார்ட் பிளாக் கட்சி இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. வரும் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 தேதிகளில் மும்பையில் இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் பாஜகவை தோற்கடிக்க வேண் டும் என்பதே எங்கள் நோக்கம். பாஜக போட்டியிடும் இடங்களில் பாஜக எதிர்ப்பு வாக்குகள் பிளவு படாமல் இருக்கும் வகையில் தேர் தலை சந்திப்போம். கடந்த தேர் தலில் பாஜக பெற்ற வாக்குகள் 33 சதவிகிதம் மட்டுமே, பாஜகவுக்கு எதிராக 67 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. எனவே, இம் முறை பாஜக எதிர்ப்பு வாக்குகள் சிதறாமல் இருப்பதற்கு ஏற்ற நட வடிக்கையை மேற்கொள்வோம். கடந்த ஒன்பது ஆண்டுகளில் எல்லா துறைகளிலும் மோடி அரசு பரிதாபகரமான முறையில் தோல்வி அடைந்து விட்டது. வேலைவாய்ப்பின்மை அதிக ரித்துள்ளது,
புதிய பொதுத்துறை நிறுவனங்கள் தொடங்கவில்லை. சமுதாய நல்லிணக்கம் பாதிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் கேள்வி எழுப்பினால், மோடி மதப் பிரச்சனைகளைத் தூண்டி விடுகின் றார். மத்திய தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் வியாழனன்று தில்லியில் தேசிய அளவிலான மாநாடு நடத்துகின்றன. இதில் மோடி அரசுக்கு எதிராக நீடித்த போராட்டங்கள் நடத்துவது பற்றி தீர்மானிக்கின்றனர். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, வரு மானத்தை உருவாக்குவோர் தொழிலாளர்களும், விவசாயி களும்தான். அவர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். மோடி ஆட்சியில் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். மாணவர் கள் நல்ல கல்விக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர். பெண்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். தாழ்த்தப்பட்டவர்கள் தங்களுக்கு நீதி கிடைக்கப் போராடிக் கொண் டிருக்கின்றனர். பழங்குடிகள் போராடுகின்றனர். மணிப்பூர் பற்றி எரிகிறது, ஹரியானா பற்றி எரி கிறது. ஆனால் நரேந்திர மோடி தூங்கிக் கொண்டிருக்கிறார். எனவே, பாஜகவை தோற்கடிப் பதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள் ளது. இந்தியா கூட்டணி பாஜகவை தோற்கடிக்கும் என்றார்.