districts

ஆசிரியர் செ.நடேசனின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

திருப்பூர், செப்.17- ஊத்துக்குளியில் ஆசிரியர் செ.நடே சன் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடைப்பிடிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ரயிலடி பேருந்து நிறுத்தம் அருகே மார்க்சிய போராளி, எழுத்தாளர், ஆசிரி யர் செ.நடேசனின் முதலாம் ஆண்டு  நினைவஞ்சலி நிகழ்ச்சி மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி ஊத்துக்குளி ஆர்.எஸ். கிளை சார்பில் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் கிளைச் செய லாளர் கே.ஏ.சிவசாமி தலைமை வகித் தார். தாலுகாக்குழு உறுப்பினர் வி.கே.பழனிசாமி வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா ளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.குமார், தாலுகாச் செயலாளர் கொளந்தசாமி, திமுக ஊத் துக்குளி தெற்கு ஒன்றியச் செயலாளர் பி.பி.ஈஸ்வரமூர்த்தி, ஊத்துக்குளி பேரூர் கழக செயலாளர் கே.கே.ராசுக் குட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலு காச் செயலாளர் வி.ஏ.சரவணன், காங்கி ரஸ் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பி னர் மனோஜ்குமார், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செய லாளர் சரஸ்வதி, தமுஎகச மாவட்டக் குழு உறுப்பினர் கை.குழந்தைசாமி, குடும்பத்தினர் சார்பில் எழுத்தாளர் சு. ராமகிருஷ்ணன் ஆகியோர் நினைவுரை யாற்றினர். முடிவில், வாலிபர் சங்க தாலு காச் செயலாளர் பாலமுரளி நன்றி தெரி வித்தார். இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுக்கா குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் மற்றும் செ.நடேசன் குடும்பத்தினர் உட்பட திரளான மக்கள் கலந்து கொண்டனர்.