districts

img

பர்னிச்சர் குடோனில் தீ விபத்து

கோவை, செப்.10- சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள பர்னிச்சர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட் கள் எரிந்து நாசமானது.  கோவை சின்னவேடம்பட்டியில் மூக்கையன் என்பவ ருக்கு சொந்தமான பர்னிச்சர் குடோன் செயல்பட்டு வருகிறது.  7000 சதுர அடியில் கொட்டகை அமைத்து பாலாஜி குஷன் ஒர்க்ஸ் என்ற பெயரில் பர்னிச்சர தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிறுவனத்தில் 10க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், செவ்வா யன்று பிற்பகல் இந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற் பட்டது. இந்த தீ விபத்தில் குடோனில் போட்டு வைக்கப்பட்டி ருந்த பழைய மரங்கள் மற்றும் பர்னிச்சர் பொருட்கள், சோபா  தயாரிக்க வைக்கப்பட்டிருந்த குஷன் உள்ளிட்டவை தீப்பி டித்து எரிய தொடங்கியது. இதனால், அப்பகுதியில் கடுமை யான புகைமூட்டம் நிலவியது. உடனடியாக இதுகுறித்து தீய ணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலை யில், தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 தீயணைப்புத் துறை வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் தீயை  அணைத்தனர். இதுகுறித்து, தீயணைப்பு துறை அலுவலர் கூறுகையில், தீ விபத்து ஏற்பட்டவுடன் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறை யினர் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இதில், உயிர் சேதம், காயங்கள் என யாருக்கும் எந்த பாதிப் பும் ஏற்படவில்லை. சேத மதிப்பு குறித்து ஆய்வு செய்யப் பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இதனிடையே பர்னிச்சர் குடோன் அருகில் இருந்த உயர் மின் கம்பியில் இருந்து ஏற் பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடும் புகை மூட்டத்துடன் நில விய தீ விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.