தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
சேலம், பிப்.25- சத்துணவு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு சத்து ணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள் ளது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங் கத்தின் சேலம் மாவட்ட 15 ஆவது மாநாடு சேலம் புதிய பேருந்து நிலை யம் சிஐடியு கூட்டரங்கத்தில் சங்கத் தின் மாவட்ட தலைவர் கே.தங்க வேலன் தலைமையில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.அம ராவதி வரவேற்றார். மாவட்ட செயலா ளர் கே.ராஜவேலு, மாவட்ட பொருளா ளர் சி.அய்யாதுரை ஆகியோர் அறிக் கையை சமர்ப்பித்து பேசினார். தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலை வர் என்.திருவேரங்கன், மாவட்ட செய லாளர் சுரேஷ், பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாநிலச் செயலாளர் வி.செல்வம், தமிழ்நாடு தொழிற் பயிற்சி அலுவலர் சங்க மாநிலப் பொரு ளாளர் என்.திருநாவுக்கரசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இம்மாநாட்டில் சத்துணவு பணியா ளர்களை முழு நேர அரசு ஊழியர் களாக மாற்ற வேண்டும். 4 ஆயிரத்திற் கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 2 ஆயிரம் பேர் மட்டுமே பணியாற்றி வருகின்ற னர். எனவே, தமிழக அரசு காலிப்பணி யிடங்களை உடனடியாக நிரப்ப வேண் டும். குடும்ப பென்சனாக 9 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். பணிக் காலம் முடிவடையும் சத்துணவு பணியாளர்களுக்கு 5 லட்சம் ரூபா யும், சமையலர்களுக்கு 3 லட்சம் ரூபா யும் வழங்க வேண்டும். அரசு ஊழியர் களின் பணி வரம்பு 62 ஆக உயர்த்தியது போல், சத்துணவு பணியாளர்களுக் கும் உயர்த்தி வழங்க வேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து, புதிய மாவட்ட தலைவராக கே.தங்கவேலன், செய லாளராக ராஜவேலு, பொருளாளராக அய்யாதுரை உள்ளிட்ட 12 பேர் கொண்ட நிர்வாக குழு தேர்ந்தெடுக்கப் பட்டது. முடிவாக மாநில பொதுச்செய லாளர் ஏ.நூர்ஜஹான் நிறைவுரை ஆற் றினார். இதில், நூற்றுக்கும் மேற் பட்ட சத்துணவு பணியாளர்கள் மற்றும் சமையலர்கள் பங்கேற்றனர்.