நீலகிரி, நவ.29- எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நீக்கப்பட்ட 15 ஒப்பந்த தூய்மைப்ப ணியாளர்களை உடனடியாக பணியில் சேர்க்கக் கோரி சிஐடியு வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே வெலிங்டன் கண்டோன் மென்ட் வாரியத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்ததூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வரு கின்றனர். இந்நிலையில் ஒப்பந்த தாரர் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி 15 பெண் பணியாளர்களை இரண்டு நாட்களுக்கு முன்பு பணியில் இருந்து நீக்கியுள்ளனர். இந்நிலையில், நீக்கப்பட்ட பெண் பணியாளர்கள் உடனடியாக பணி யில் சேர்க்க வேண்டும் என சிஐடியு சார்பில், தொடர் உண்ணாவிரத் துடன் ஆர்ப்பாட்டம் என சிஐடியுவினர் அறிவித்து ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, சிஐடியு நிர்வாகிகள் கண்டோன்மென்ட் சிஇஓ.,விடம் பேச் சுவார்த்தை நடத்தியதில், சுமூகத் தீர்வு எட்டப்பட்டு 15 பெண் தூய்மை பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்வதாக உறுதியளித் தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். முன்னதாக, சிஐடியு மாவட்ட செயலாளர் வினோத்குமார் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில், சிஐடியு நிர்வாகிகள் உட்பட பாதிக்கப்பட்ட பெண் பணியாளர் கள் பலர் கலந்து கொண்டனர்.