ஈரோடு, பிப்.13- சென்னிலை மலைப் பகுதியில் வெறி நாய்கள் கடித்து ஆடுகள் இறந்ததால், பாதிக்கப்பட்ட விவசா யிகள் பாறைவலசு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு வரு கின்றனர். ஈரோடு மாவட்டம், சென்னி மலை அருகே ஒரத்துப்பாளையம் அணை அருகில் ராமலிங்கபுரத்தில் நல்லசாமி என்பவரது பட்டியில் புதனன்று இரவு வெறிநாய்கள் புகுந்து கடித்ததில் 20 ஆடுகள் பலி யானது. இதனைக் கண்டித்து வியாழனன்று அப்பகுதியில் திரண்ட விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதி காரிகள்யாரும் வராததால் போராட் டம் சென்னிமலை - காங்கயம் சாலையில் பாறைவலசு பகுதிக்கு மாறியது. இறந்த ஆடுகளுடன் வந்த விவசாயிகள் சாலை மறிய லில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காங் கேயம் வட்டாட்சியர், காவல் துறை யினர் அங்கு வந்து விவசாயிகளு டன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், விவசாயிகள் போராட் டத்தை கைவிட மறுத்த நிலையில், வட்டாட்சியர் அங்கிருந்து புறப்பட் டுச் சென்று விட்டார். சாலையில் கிடத்தப்பட்டிருந்த ஆடுகளை அப் புறப்படுத்த காவல் துறையினர் முயன்றனர். எனினும் விவசாயிகள் ஆடுகளை எடுக்க ஆட்சேபம் தெரி வித்தனர். இதையடுத்து காவலர் கள் விட்டுவிட்டனர். மறியலில் ஈடு பட்டிருந்த விவசாயிகள் கூறுகை யில், ஆடுகளுக்கு இழப்பீடு வழங் கும் அரசு உத்தரவு கொடுத்தால் தான் போராட்டத்தைக் கைவிடு வோம். இல்லாவிட்டால் இதே இடத்தில் எத்தனை நாட்களான லும் எங்கள் போராட்டம் தொட ரும், என்றனர். அத்துடன் அங் கேயே மதியம் உணவு சமைத்து சாப்பிட்டு விவசாயிகள் போராட் டத்தைத் தொடர்ந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள் ளது.