பொள்ளாச்சி, ஜூலை 7- தொடர் மழையின் காரண மாக பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி யில் கொப்பரை தேங்காய் உற்பத்தி பாதிப்படைந்துள் ளது. இதனால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப் கட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி, நெக மம், சிறுகளந்தை, சுல்தான்பேட் உள்ளிட்ட பகுதிகளில் தென்னை சார்ந்த தொழிலில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தேங்காய்களை களங்களில் உலரவைத்து கொப்பரையாக உற்பத்தி செய்து வருகின்றனர். கொப்பரை தேங்காய் உற்பத்தியாளர்கள் பல எண்ணெய் நிறுவ னங்களுக்கு தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறார்கள். இந்நிலையில், பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 20 நாட்க ளாகவே தென்மேற்கு பருவமழை தீவிர மாக பெய்து வருகிறது. இதனால், 50 ஆயிரம் டன் கொப்பரை தேங்காய் உற்பத்தி பாதிக்கப் பட்டு, சுமார் 60 கோடி ரூபாய் வரை வர்ததக இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொழிலை நம்பி யுள்ள 15 ஆயிரம் தொழிலாளர்கள் நேர்முக மாகவும் மறைமுகமாகவும் வருவாய் இழந்து நிற்கின்றனர் என கொப்பரை விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, தமிழகத்தில் தேங்காயின் விலை சரிவடைந்து, ஒரு தேங்காய் 10 ரூபாய்க்கு விற்பனையாகி வருவதால் விவ சாயிகள் அதிகப்படியான இழப்பை சந்தித்து வருகின்றனர். எனவே, விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொப்பரை விவசாயி கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.