districts

img

உயர்மின் கோபுரத்தால் பாதிப்பு: உரிய இழப்பீடு கோரி விவசாயிகள் போராட்டம்

இளம்பிள்ளை, மார்ச் 22- உயர் மின்னழுத்த கோபுரங் களால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு தொகை உயர்த்தி வழங்கக்கோரி, விவசாயி கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதி வழியாக, சட்டிஸ்கர் மாநிலம் ரைக்காரிலிருந்து, திருப்பூர் மாவட் டம் காங்கேயம் வரை பவர்கிரிட் நிறுவனத்தின் சார்பில் உயர் மின்ன ழுத்த கம்பிகள் கொண்டு செல்லப் படுகிறது. இதற்காக விளைநிலங் கள் வழியாக உயர் கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வரு கிறது. இத்திட்டத்திற்காக கையகப் படுத்தப்பட்ட விளைநிலங்களுக்கு பவர்கிரிட் நிறுவனம் குறைவான இழப்பீடு தொகை வழங்குவதை  கண்டித்தும், இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்கக்கோரியும் திங்க ளன்று, எடப்பாடி அருகே வேம்ப னேரி கிராமத்தில் உயர் மின் கோபு ரங்களால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் கூட்டமைப்பின் சங்ககிரி தாலுகா செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பின் எடப்பாடி ஒருங்கிணைப்பாளர் பெருமாள், பொறுப்பாளர் ஜெய வேல், மாதர் சங்க மாவட்ட செயலா ளர் ராசாத்தி உள்ளிட்ட  ஏராளமா னோர் கலந்து கொண்டனர். மேலும், இழப்பீடுத் தொகையை உயர்த்தி வழங்கும் வரை தொடர் போராட் டங்களில் ஈடுபட போவதாக விவ சாய சங்கங்களின் நிர்வாகிகள் தெரி வித்துள்ளனர். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் அருகே உள்ள கடைய நல்லூரில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு உயர்மின் கோபுரங்க ளுக்கு எதிரான விவசாயிகளின் கூட் டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.செல்லமுத்து தலைமை வகித் தார். இதில், ஒருங்கிணைப்பாளர் படைவீடு பெருமாள், பாதிக்கப் பட்ட விவசாயிகள் அருணாசலம், குணசேகரன், கிருஷ்ணகுமார், ஜெகநாதன் உட்பட 50க்கும் மேற் பட்ட விவசாயிகள் கலந்து கொண்ட னர்.