நாமக்கல், பிப்.17- தலைநகர் தில்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக் கையை நிறைவேற்றாமல், கடும் அடக்குமுறையை ஏவி விடும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நாமக்கல்லில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ஒன்றிய மோடி அரசு விவசாயிகளுக்கு கொடுத்த வாக்கு றுதியை நிறைவேற்ற வேண்டும். தில்லியில் போராடும் விவசா யிகளின் மீது நடத்தப்படும் கொடூர தாக்குதலை பாஜக அரசு நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி பள்ளிபாளையம் ஒன்றியம், கல்லாங்காட்டு வலசு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, விவசாய சங்க வடக்கு ஒன்றியச் செயலாளர் தனேந்திரன் தலைமை ஏற்றார். இதில் விவசாய சங்க மாவட்டச் செயலாளர் பி.பெருமாள், இந் திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் மணி கண்டன் ஆகியோர் உரையாற்றினர். இதில் திரளானோர் பங்கேற்றனர்.