விவசாயிகள் குறைதீர் முகாம்
ஈரோடு, ஜூலை 17- ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், ஜூலை 19 ஆம்தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டங்களுக்கு வரும் 19ஆம் தேதி காலை 11 மணிக்கு ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில், விவசாய நிலங்களை நில அளவைத்துறை மூலம் அளவீடு செய்தல்,விவசாய நிலங்கள், பாதைகள், ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றுதல் போன்ற கோரிக் கைகளுக்கு தீர்வு காணலாம். மேற்படி முகாமில் விவசாயிகள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கலாம் என ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் ம.சதீஸ்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
உங்களைத்தேடி உங்கள் ஊரில் முகாம்
கோவை, ஜூலை 17- கோவை மாவட்டம், மோப்பிரிபாளையம் முதல் நிலை பேரூராட்சியில், “உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம் வியாழன் மற்றும் வெள்ளி இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட் டுள்ளது.
இதுகுறித்து மோப்பிரிபாளையம் பேரூராட்சியின் மன்றத் தலைவர் மற்றும் செயல் அலுவலர் விடுத் துள்ள செய்திக்குறிப்பில், ஜூலை 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மோப்பிரிபாளையம் பேரூராட்சி மற் றும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் 12 மணி வரை, பொதுமக்களிட மிருந்து மனுக்கள் பெறும் முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு மனுக்கள் கொடுத்து பயன்பெற வேண்டும். மேற்கண்ட மனுக்கள் பெறும் முகாம் முடிவுற்ற பின்பு நமது பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் நடைபெறும் திட்டப்பணிகளை கோயம்புத்தூர் மண்டல பேரூராட்சி உதவி இயக்குநர் அவர்களால் ஆய்வு செய்யப்படவுள்ளது, அதனைத் தொடர்ந்து பிற்பகல் 4.30 மணி முதல் 6.00 மணி வரை சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், கோவை மாவட்ட ஆட்சி யர் பங்கேற்று மனுக்கள் பெறு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க கெடு
ஈரோடு, ஜூலை 17- மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெறும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் வாழ்நாள் சான் றினை இம்மாத இறுதிக்குள் ஈரோடு மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் செய்திக்கு றிப்பில் கூறியுள்ளதாவது, ஈரோடு மாவட்டத்தில் வசிக் கும் மாற்றுத்திறனாளிகளுக்கு, மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வரு கிறது. உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் உயிருடன் உள்ளனர் என்பதற்கான சான்றினை சமர்ப் பிக்க வேண்டும். இதனை தங்களது பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய படிவத்தில் கையொப்பம் பெற்று, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் குடும்பத் தில் எவரேனும் ஒருவர் நேரில் வந்து ஜூலை 31க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்கறி மற்றும் பழங்களின் விலை உயர்வு
கோவை, ஜூலை 17- தொடர் மழை காரணமான காய்கறி மற்றும் பழங் களின் வரத்து குறைந்து விலை கடுமையாக உயர்ந்து உள்ளது.
கோவை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், காய்கறி உற்பத்தி குறைந்து உள்ளது. வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கோவைக்கு காய்கறி வரத்து குறைந்து உள்ளது. இது குறித்து காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கூறுகை யில், தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமக, காய்கறிகள் மற்றும் பழங்களின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால், தற்போது காய்கறி விலை உயர்ந்து உள்ளது. தக்காளி கிலோ ரூ.100, வெங்காயம் கிலோ, ரூ.80, பச்சை மிளகாய் ரூ.85, முருங்கக்காய் ரூ.100, ஊட்டி உருளைக்கிழங்கு ரூ.90 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வழக்கமாக முட்டைக்கோஸ் விலை குறைவாக இருக்கும் தற்பொழுது முட்டைக்கோஸ் விலை ரூ.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. பூண்டு விலை கிலோ ரூ. 254 விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று பழங்களின் விலையும் உயர்ந்து உள்ளது. மாதுளை கிலோ ரூ.200, மாம்பழம் ரூ.150, ஆப்பிள் ரூ.220க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மழை குறையத்துவங்கினாள் வரும் நாட்களில் காய்கறி மற்றும் பழங்களின் விலை வெகுவாக குறைய வாய்ப்பு உள்ளது என நம்பிக்கை தெரிவித்தனர்.
சிறு குறு தொழில் அழிவுக்கு வழிவகுக்கும் மின் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரிக்கை
திருப்பூர், ஜூலை 17 - திருப்பூர் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களின் அழிவுக்கு வழிவகுக்கும் மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் (டீமா) கோரியுள்ளது.
டீமா தலைவர் எம்.பி.முத்துரத்தினம் மின் கட்டண உயர்வு தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவிலேயே சிறு, குறு நடுத்தர தொழில் செய்பவர்கள் அதிகமாக உள்ள மாநிலம் தமி ழகம். திருப்பூரில் 90 சதவீதம் சிறு, குறு, நடுத்தர தொழில் செய்பவர்கள் உள்ளார்கள். அவர்கள் 50 சதவீதத்திற்கு மேல் தொழிலை விட்டு வெளியேறி உள்ளார்கள். இன்றைய நிலையில் மின் கட்டண உயர்வில் இருந்து ஏற்கனவே மீள முடியாமல் உள்ள நிலையில், தற்போது மின் கட்டண உயர்வு என்பது ஒட்டுமொத்த சிறு, குறு, நடுத்தர தொழில் அழிவுக்கு வழி வகுக்கும். எனவே தமிழக அரசு மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும், என்று முத்துரத்தினம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
நீர் தேங்கும் இடங்களில் ஆய்வு
நாமக்கல் ஜுலை-17 கனமழை காலங்களில் நீர் தேங்கும் இடங்களை திருச் செங்கோடு நகர் மன்றத் தலைவர் செவ்வாயன்று ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், மழை காலங் களில் மேடான பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் சூரியம்பாளையம் ஏரி நிரம்பியவுடன் ராஜா கவுண்டம்பா ளையம் மற்றும் கூட்டப் பள்ளி ஏரிக்கு சென்றடையும். இந்நி லையில், மழைநீர் செல்ல போதுமான வடிகால் வசதி இல்லாத தால், வெள்ளாளர் காலனி முதல் தெருவில் உள்ள குடியிருப்பு கள், விவசாய நிலங்களிலும் மழைநீர் பெருமளவில் தேங்குகி றது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டு மென அப்பகுதியினர் கோரிக்கை வைத்தனர். இதனை யேற்று, வேளாளர் காலனி பகுதிக்கு நகர மன்றத் தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆய்வு செய்தார்.
மேலும், ராஜா கவுண்டம்பாளையம் ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேறும் மதகுப்பகுதியையும் பார்வையிட்டு வழியில் உள்ள காடுகள் மற்றும் இடங்களை வைத்திருப் பவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தங்களது பட்டா நிலத்தில் மூன்றடி இடம் கொடுத்தால் உரிய வகையில் அரசிடம் அனுமதி பெற்று, மழை நீர் வடிகால் அமைத்து தர ஆவண செய்கிறேன் என்றார்.
இட உரிமையாளர்களும் தங்களது பகுதியில் 25 வருடங்களுக்கும் மேலாக தீராமல் உள்ள பிரச்சனைக்கு தீர்வு காண முன் வந்த நகர மன்றத் தலைவருக்கு நன்றி தெரிவிப் பதோடு தங்களது இடத்தை முறைப்படி நகராட்சிக்கு தருவதாகவும் உறுதியளித்தனர்.
வீட்டை சேதப்படுத்திய காட்டு யானைகள்
கோவை, ஜூலை 17- கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கி இருந்த குடிசை வீட்டைதிடீரென காட்டு யானைகள் புகுந்து சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், சின்ன தடாகம் பகுதியில் இட்லி கடை நடத்தி வரும் ரங்கராஜ். இவர் அதே பகுதியில் உள்ள சௌடாம்பிகை நகரில் சொந்தமாக வீடு கட்டிக் கொண்டு உள்ளார். அதற்காக கட்டுமானம் பணிகள் செய்யும் வேலை யாட்கள் தங்குவதற்கு குடிசை அமைத்து அதில் தங்கி வருகின் றனர். இந்நிலையில், செவ்வாயன்று இரவு தொழிலாளர்கள் நான்கு பேர் அந்த குடிசையில் தூங்கிக் கொண்டு இருந் தனர். அப்போது சுமார் இரவு 11 மணி அளவில், அங்கு வந்த இரண்டு காட்டு யானைகள் அவர்கள் தங்கி இருந்த குடிசையை சேதப்படுத்தி அவர்களை தாக்க முயன்றது. அப்பொழுது திடீரென விழித்துக் கொண்ட அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால், குடிசையை மட்டும் சேதப்படுத்திவிட்டு சென்றது. இப்பகுதியில் காட்டு யானை கள் வராமல் தடுக்க வனத்துறையினர் தொடர் ரோந்து பணிக ளில் ஈடுபட்டு, பொதுமக்களின் உயிர்களை பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.