மே.பாளையம், டிச. 16- ஊருக்குள் நுழையும் யானை உள்ளிட்ட வனவிலங்குளை கட்டுப் படுத்தாமல் வனத்துறை மெத்தன போக்காக நடப்பதாக குற்றம்சாட்டி, வனவிலங்குளால் சேதமான பயிர் களுடன் காரமடை வனச்சரக அலு வலகத்தை முற்றுகையிட்டு விவசா யிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கு தொடர்ச்சி மலையடிவா ரத்தில் அமைந்துள்ள மேட்டுப் பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயமே முக்கிய வாழ்வாதார தொழிலாக உள்ளது. இங்கு வாழை, தென்னை, கரும்பு, பாக்கு விவசாயம் பிரதான மாக செய்யப்பட்டு வரும் நிலை யில், இப்பகுதிகளில் வனத்தை விட்டு வெளியேறும் யானை, காட்டுப் பன்றி, மான் போன்ற வன உயிரினங் கள் விளை நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை அன்றாடம் சேதப்படுத்தி வருகிறது. பெரும் இழப்பிற்கு ஆளாகி வரும் விவசாயி கள் வனத்தை விட்டு வனவிலங்குள் வெளியேறுவதை வனத்துறையினர் தடுக்க தவறி விட்டதோடு யானை கள் தோட்டங்களுக்குள் நுழையும் போது வனத்துறைக்கு தகவல் தெரி வித்தால், அவற்றை விரட்ட நடவ டிக்கை ஏதும் எடுக்காமல் மெத்தன போக்காக நடந்து கொள்வதாக குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில், சனியன்று, யானை மற்றும் காட்டு பன்றிகளால் சேதமான தென்னை உள்ளிட்ட விவ சாய பயிர்களுடன் தழிழக விவசாயி கள் சங்க மாநிலத் தலைவர் வேணு கோபால் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் காரமடை வனச்சரக அலுவகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தினர். வனத் துறை உயர் அதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தாமல் போராட் டம் கைவிடப்படாது என தெரிவித்து காரமடை-தோலம்பாளையம் சாலையில் உள்ள வனச்சரக அலுவ லகத்தை சூழ்ந்த நின்றனர். இதனையடுத்து சம்பவ இடத் திற்கு வந்த காரமடை காவல்துறை ஆய்வாளர் மற்றும் வனத்துறை அலு வலர்கள் விவசாயிகளுடன் பேச்சு வார்த் தை நடத்தினர். இனி வரும் காலங்க ளில் விவசாய பயிர்களை வனவிலங் குகள் சேதப்படுத்தாமல் இருக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின் விவசாயிகள் கலைந்து சென்றனர். விவசாயிகளின் முற்றுகை போராட்டத்தால் இப்பகுதி யில் சுமார் இரண்டு மணி நேரம் பரப ரப்பான சூழல் ஏற்பட்டது.