districts

img

தக்காளி விலை சரிவு: விவசாயிகள் கவலை

தருமபுரி, செப்.14- தருமபுரி மாவட்டத்தில் தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை டைந்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பாளையம், ஐந்து மைல்கள், திருமல்வாடி, காரிமங்கலம், கம்பைநல்லூர், மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராயக் கோட்டை, தளி, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவ சாயிகள் தக்காளி அதிகபடியாக விளைவித்து வருகின்ற னர். இங்கு விளைவிக்கும் தக்காளி தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, மதுரை, திருச்சி, கோவை என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக் கும், அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக் கும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பு தக்காளி விளைச்சல் அதிகரிப் பால் கிலோ 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் நட்டமடைந்த விவசாயிகள் அறுவடை செய்த தக்காளிகளை நீர்நிலைகளில் கொட்டிச் சென்றனர். மேலும், பயிரிட்ட தக் காளி செடிகளை அழித்து வேறு பயிருக்கு மாறினர். இதனால் வரத்து குறைந்து, கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு தக் காளி 160 முதல் 200 ரூபாய் வரையும் விற்பனையானது. தொடர்ந்து இரண்டு மாதங்களாக விலை நீடித்ததால் விவசா யிகள் தக்காளி பயிரிட ஆர்வம் காட்டினர். தற்போது தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை படிப்படி யாக குறைந்து 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிலோ ரூ.3க்கும், தரும புரி மாவட்ட உழவர் சந்தையில் கிலோ ரூ.12க்கும் விற்பனை  செய்யப்படுகிறது. மேலும், வியாபாரிகள் விவசாயிகள் இடத்தில் கிலோ ரூ.3 ரூபாய் முதல் 5 ரூபாய்க்கு வாங்கி செல்வ தால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.