districts

img

மக்காசோளம் விலை வீழ்ச்சி – விவசாயிகள் வேதனை

உடுமலை, ஜன.11-  அறுவடை காலத்தில் மக்காசோள விலையை வியா பாரிகளும், கால்நடை தீவன நிறுவனங்களும் சிண்டி கேட் அமைத்து செயற்கையாக விலை குறைப்பு செய்வதால்  விவசாயிகள் பெரும் வேதனைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே, ஒன்றிய, மாநில அரசுகள் மக்காசோளத்திற்கு நிரந்தர விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயி கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   உடுமலை, மடத்துக்குளம் மற்றும் தாராபுரம் பகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மக்காசோளம் பயிரி டப்பட்டுள்ளது. மக்காசோளம் பயிர் செய்யும் போது குவிண் டால் ஒன்றுக்கு ரூபாய் 2,500 வரை விலை இருக்கும். ஆனால் அது அறுவடை காலத்தில் ரூபாய் 1,700 முதல் 1,800 ஆக வியாபாரிகளால் நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது. ஒரு  ஏக்கர் மக்காசோளம் பயிர் செய்ய விதை, உரம், பூச்சி மருந்து மற்றும் அறுவடை என ரூபாய் 15 ஆயிரம் முதல் 20  ஆயிரம் வரை செலவு ஏற்படுகிறது. தற்பொழுது அதீத மழை  பெய்த காரணத்தால் விலைச்சலும் குறைவு, மேலும், மக்கா சோள தட்டுகளையும் விற்பனை செய்ய இயலாத நிலை யும் ஏற்பட்டுள்ளது.   இவ்வாறு குறைவான விளைச்சல் உள்ள நிலையில் விலை குறைப்பு செய்வதால் விவசாயிகள் பெரிதும் பாதிக் கப்படுகின்றனர். இப்பகுதிகளில் விவசாயிகள் வருடம் முழு வதும் மக்காசோளத்தை அதிகமாக உற்பத்தி செய்வதால், இங்கு கால்நடைகள் மற்றும் கோழி தீவன நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளது. இந்நிலையில், இந்த நிறுவ னங்களுடன் வியாபாரிகளும் கூட்டு சேர்ந்து செயற்கையாக விலை குறைப்பு செய்து விடுகின்றனர். எனவே, விவசாயி களுக்கு போதுமான விலை கிடைக்க ஒன்றிய, மாநில அரசுகள் குவிண்டால் ஒன்றுக்கு மூவாயிரத்து ஐநூறு ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயி கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.